மற்றொரு மன்னரைக் காணவா போகிறோம் !
=========================================
மன்னர் பெருமிதமும், மரபின் மாட்சியும் காத்து வளர்க்க வேண்டும் என்ற இலக்கோடு வாழ்ந்த சிங்கம்பட்டிக் குறுநில மன்னர், மேன்மை வாய்ந்த முருகதாசு தீர்த்தபதி அவர்களை நான் நன்றாக அறிவேன். நானும் என் துணைவியாரும் நெல்லைக்குச் சென்றிருந்தபோது, எங்களை வந்து பார்த்த பரிவை என்னால் மறக்க முடியாது.
சென்னைக்கு வந்தபோதும், அறிஞர் எழிலமுதன் இல்லத்திற்கு வந்திருந்தபோது நான் சென்று கண்டேன். எத்தனையோ கனவுகளோடும் அரசுக்கு முறையீடுகளோடும் பெருமிதமாக வாழ்ந்த மன்னர் மறைந்து விட்டார். இனி நம் கண் முன்னால் மற்றொரு மன்னரைக் காணவா போகிறோம்!
….. முனைவர் ஔவை நடராசன்

Add a Comment