POST: 2020-04-28T10:40:12+05:30

என் முதல் சந்திப்பு ஔவை நடராசன் அவர்களுடன்…

கரந்தையில் படித்த போது
கவிப்பொன்னி வளவன் என்னை
சரபோஜி கல்லூ ரிக்கே
வாவென அழைத்துச் சென்றார்!
வரவேற்றார் ஔவை! அன்னார்
வாயினில் வந்த வார்த்தை
சுரமென இனித்த தங்கே!
சுகமான சந்திப் பென்பேன்!

உணவுண்டோம்! உபச ரித்தார்!
உரையாடி மகிழ்ந்தோம்! பின்னர்
உணர்வுக்கோ மாலை நேரம்
உரித்தபலாச் சுளையைப் போலே
அணியென மாண வர்கள்
அங்கேதான் திரண்டி ருக்க,
கணீரெனக் குரலெ டுத்துக்
கவிச்சுவை தந்தார் பொன்னி!

நடராச ஔவை அந்நாள்
நண்பராய் ஆன பின்பு
தொடர்ந்திந்நாள் வரைக்கும் நானோ
தொடர்ந்தவர் நண்ப னாகத்
தொடர்கின்றேன்! தொய்வே இல்லை!
தோழமைக் கினியார் ஔவை!
வடக்கயி றன்ன ,கெட்டி
நட்பெங்கள் நட்பே என்பேன்!

பெருவளப் பூரார் என்றே
பெரும்பாலும் அழைப்பார் என்னை!.
திருவுளம் கொண்ட ஔவை
திறமைக்கார் இணையிங் குரைப்பீர்?
கருவினில் திருவு டையார்!
கவிதையாய் உரையி ருக்கும்!
வருகையில் நான்காம் ஔவை!
வாழ்த்துவோம்! வாழ்த்து வோமே!

//// புலவர் இளஞ்செழியன்

குறிப்பு
1957அல்லது1958
பொன்னி புலவர்
வகுப்பில் 3ஆம் படித்தபோது நான் முதல் ஆண்டில்
படித்தேன்.அ.அறிவொளியும் என் வகுப்புத்
தோழரே.பொன்னியின்
நிழலாய் நான் இருந்தேன்.1970இல்
திருச்சியிலிருந்து
நான் சென்னை வந்து
இராயபுரம் எட்டியப்பர்
பள்ளியில் தமிழாசிரியர் பணி
ஏற்றதே பொன்னி வளவன் ஏற்பாடுதான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *