POST: 2019-02-26T12:06:18+05:30

மக்கள் கவிஞர் கபிலன் கேட்பவர் மனங்கள் எக்களிக்கும் விதத்தில்
எழுதித் திரைச் சிகரத்தில் பாட்டரசராக உலா வருகிறார்.
எப்போதும் என்னைப் பரிவு பொங்கப் பாராட்டும் பண்பு கொண்டவர்.
எந்த முயற்சியிலும் நான் வெற்றி பெற முயன்றால்
மக்கள் கவிஞரின் அறிமுகத் தொடர்களைத் தான் கேட்பேன்.

அன்று (01.02.2003) தந்த அறிமுக வரியும் இன்று (02.02.2019) எழுதிய அறிமுகத்தொடரை என் இனிய நண்பர் மலையாள மொழிபெயர்ப்பாளர் திரு.இரகுராம் மலையாள மொழியில் இரு கவிதைகளையும் கவின் மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளதை முகநூலில் வரைவதில் பெருமிதமடைகிறேன்.
—– ஔவை அருள்
=================================

അവ്വൈ അരുളിന് ആശംസകൾ
കുയിൽ ഊതുന്ന കുറുങ്കുഴൽ പോലെ യവൻ ചിരിക്കും ;
മാനത്തെ അർദ്ധ ചന്ദ്രന്റെ വെട്ടം പോലെ ചന്തമുള്ളവൻ ;
മയിലിന്റെ വിടർന്ന പീലി പോലെ
സമൃദ്ധമായ കേശം ;
സമ്പന്ന മാളികകളിൽ ആർക്കും വിലക്കെടുക്കാവുന്ന മനുഷ്യനല്ല അവൻ ;
പൊരിവെയിലിന്മേൽ നടന്നാലും കറുത്തു പോകില്ലവൻ ;
വിൺതാരങ്ങളെ കൂട്ടിയിണക്കി ചന്ദ്രനെ നിർമ്മിക്കുമവൻ ;
വിദേശ ഭാഷയിൽ തമിഴ് വാക്കുകൾ അന്വേഷിച്ചു ചെന്നവൻ ;
ഞങ്ങളുടെ (ആദി കവയത്രി )അവ്വൈയമ്മ പെറ്റ ‘ആത്തിചൂടി ‘ഗ്രന്ഥമാണ് അവൻ ;
അവന്റെ സംഭാഷണത്തിൽ മാര്ക്കൊഴുന്നിന്റെ സുഗന്ധം ;
ചെന്നൈ സർവകലാശാലയിൽ അവൻ തമിഴ് അഭ്യസിച്ചു ;
മാംസക്കറി ഭക്ഷിക്കാത്ത ‘ശൈവ പിള്ള ‘ യാണവൻ ;
വരയുള്ള കടുവ യാണ്, വരയൻ കുതിരയല്ല ;
ചെന്തമിഴ് ശാഖകൾ മൂന്നിന്റേയും വളർത്തുപുത്രനാണവൻ ;
മഹാപണ്ഡിതന്റെ പേരക്കിടാവ് ;
രുചികൾക്കു പേരുകേട്ട തമിഴ് ഭക്ഷണം ;
(കവി )കമ്പന്റെ കാവ്യഭംഗി ;
സന്ധികളില്ലാത്ത ഈ കരിമ്പിന് കപിലന്റെ അഭിവാദ്യങ്ങൾ.
—- കപിലന്

குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்; வானின்
குருத்துநிலா ஒளிபோன்ற அழகன்; அந்த
மயில்தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்;
மாளிகையில் விலைபோகும் மனிதன் இல்லை;
வெயில்மீது நடந்தாலும் கறுக்க மாட்டான்;
விண்மீனைக் கூறுகட்டி நிலவு செய்வான்
அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆய்ந்தான்;
எங்கள் அவ்வையத்தாய் பெற்றெடுத்த ஆத்தி சூடி;
மருக்கொழுந்து வாசம்தான் பேச்சு; சென்னை
மாநிலததுப் பல்கலையில் தமிழைக் கற்றான்;
கறிக்குழம்பு உண்ணாதத சைவப் பிள்ளை;
வரிப்புலிதான் வரிக்குதிரை அல்ல; முப்பால்
வளர்ப்புமகன்; முதறிஞர் பேரன்; உப்புக்
கரிக்காத தமிழ்உணவு; கம்பன் செய்யுள்;
கணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து.
கவிஞர் கபிலன்
கல்லூரி நிழலில்.
01.02.2003
*************************

തിരമാലകളിലേക്കു നോക്കി മുടി ചീകാനാകില്ല ;
‘അവ്വൈ അരുളിനെ ‘ കണ്ടാൽ തമിഴകത്തെ ദർശിക്കാം ;
ഒരേ കുടുംബത്തിൽ രണ്ട് മഹാന്മാരായ തമിഴ് പണ്ഡിതർ ഇരിക്കെ മൂന്നാമത്തെ പണ്ഡിതനായി തന്റെ സ്ഥാനമുറപ്പിച്ച മഹദ് വ്യക്തി ;
ചെന്തമിഴിൽ അന്യഭാഷാ ഗവേഷണം ചെയ്തവൻ,
shakespearian അധ്യാപനത്തിൽ ശ്രേഷ്ഠൻ ;
നേരം പുലർന്നിട്ടും വെൺചന്ദ്രനായി പ്രകാശിച്ചവൻ ;
മുത്തശ്ശനെയും പിതാവിനെയും പിൻപറ്റി സ്വയം ഭാഷാ പരിവർത്തനം നടത്തി
വിവർത്തന ശാഖയിൽ തലവനായി ഭവിക്കുന്നു ;
ഒരു വരിയായാൽ പഴഞ്ചൊല്ല്
ഈരടിഎങ്കിൽ thirukkural
മൂന്നു വരിയോ ഹൈക്കു
നാല് varikku ‘വെണ്പാ ‘രൂപത്തിൽ,
വരി വരിയായി വളർന്നിപ്പ്പോൾ,
അളവ് തിട്ടപ്പെടുത്താൻ പറ്റാത്ത
പദ്യ ശാഖയെപ്പോലെയവൻ
പ്രസിദ്ധി ആർജ്ജിച്ചു തലയുയർത്തി നിൽക്കുന്നു !
(കവി )സുബ്രഹ്മണ്യ ഭാരതി യുടെ വാക്കുകളിൽ
നിന്നെ പ്രകീർത്തിക്കുന്നു ഞാൻ !
മനസ്സിന്റെ ഊർജം പോഷിപ്പിക്കുന്നവൻ,
വിനയത്തോടെ ജീവിക്കുന്നവൻ,
സുബ്രഹ്മണ്യ ഭാരതിയുടെ വിശകലനങ്ങൾ
ഉപയോഗപ്രദമായ പ്രബന്ധമായി
സൃഷ്ടിച്ച നീ നീണാൾ വാഴട്ടെ.

— — ട്രാൻസ്ലേഷൻ Dr രഘുറാം

அலைபார்த்துத் தலை வாரமுடியாது
ஔவை அருள் பார்தது தமிழ்முகம் காணமுடியும்
ஒரே குடும்பத்தில் இரண்டு தமிழறிஞர்கள் இருக்க
மூன்றாம் அறிஞனாய் தன்னை முன்மொழிந்து கொண்டவன்
அருந்தமிழில் அயல் மொழியை ஆய்ந்தவன்
சேக்ஸ்பியர் முனைவரில் தோய்ந்தவன்
விடிந்த பிறகும் வெண்ணிலாவாய்க் காய்ந்தவன்
தாத்தா, தந்தையாய்த் தன்னை மொழிபெயர்த்ததால்
மொழிபெயர்ப்புத்துறையில் இயக்குநராக இருக்கிறான்
ஒரு வரி பழமொழி,
இரு வரி திருக்குறள்,
மூவரி ஐக்கூ,
நான்கு வரி வெண்பா என்று
வரிவரியாக வளர்ந்து தற்போது
அளவில் அகப்படாத ஆசிரியப்பாவாய்
அமைந்த புகழோடு நிமிர்ந்து நிற்கிறான்!
பாரதியின் வார்த்தையால் உன்னைப் பாராட்டுகிறேன்
வல்லமை வளர்ப்பவன், வணங்கி வாழ்பவன்
பாரதி பதில்கள் – பயனுள்ள பனுவல்
படைத்தவன் நீ வாழ்க !
—– மக்கள்கவி கபிலனின் கற்கண்டுத் தொடர்கள்
02.02.2019

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *