மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-134
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
வைகையைப் பாடத் தொடங்கி, வால்கா வரைக்கும் வளர்ந்து கிளர்ந்த மகாகவியே! உன் வளர்ச்சிதான், வளர்ச்சிக்கே உதாரணம் காட்டும்படியாக இருந்தது!
கவிதையாய் வாழ்ந்தவனே! தாகூரும் கிப்ரானும், விட்மனும் வாழுகிற காலம்வரை எங்கள் நினைவில் வாழ்ந்திருப்பாய்!
அரசவைக் கவிஞனாய் உன்னை அலங்கரித்த எங்கள் தர்மனைத்தான் தவிக்க விட்டுவிட்டுத் தனிப் பயணம் தொடங்கி விட்டாய்!
பறம்பு மலையில் பாரி இல்லை – கபிலர் இருந்தார்; கவிதை வடித்தார்!
இன்றோ – தமிழ் மண்ணில் கபிலா; கண்ணா, நீ இல்லை! உனக்காக எங்கள் பாரி கண்ணீர் வடிக்கிறார்.
அந்த ஒரு சொட்டுக் கண்ணீரே உனக்கு ஆயிரம் கவிதை மலர்களைச் சூட்டுகிறது.

Add a Comment