மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-132
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
பூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை
சேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகின்றான்; “லாலீலா” பாடுகின்றான்
வெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தைப்
பிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.
நீ எழுதிய வைர வரிகளுக்கு நீயே அபிநயம் பிடித்துக் கொண்டு அழகு காட்டுகிறாயா?
நீ இறந்தாய் என்பதை ஏற்றுக் கொண்டால் கவிதையின் எதிர்காலம் அல்லவா இறந்தகாலமாகி விடுகிறது!
உயிரெழுத்தே! நீ இல்லை என்றால், இனி, மெய்யெழுத்து எல்லாம் பொய்யெழுத்து அல்லவா? நீ சொன்னதெல்லாம் கவிதை – நீ சொன்னால் கவிதை – நீ சொன்னால்தான் கவிதை –
வார்த்தைகள் நடந்தால் வசனம்! நடனமாடினால் கவிதை!
நீ பாடுகிற போது அவைகள் நடந்துகொண்டே நடனமாடும்! ஆடிக் கொண்டே தாளமிடும்! அற்புதமாய்க் கோலமிடும்!
நீ இரவெல்லாம் கண் விழிக்கிற குண்டுமல்லி இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிற குறிஞ்சியாகக் கூட இல்லை-சங்க இலக்கியத்தில் சங்கமமாகிப் போன கோட்டுப் பூ! தமிழ்நாட்டு பூ!

Add a Comment