POST: 2017-11-12T08:53:03+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-126
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–

நீ கூடு விட்டுக் கூடு மாறிய அரசியல் சித்தன்! இருந்தும் எந்தக் கூட்டிலிருந்தும் குச்சிகளைக் கொண்டு வந்தவன் அல்ல.

நீ சில கட்சிகளை மாற்றிக் கொண்டாய்? உன் மாதிரி ஒரு கவிஞன், மில்டன். மனைவிகளையே மாற்றிக் கொண்டான்!

எல்லோரும் கவியரசருக்கு ஐம்பத்தைந்து வயது என்று எழுதுகிறார்கள். எனக்குள்ளே மெல்லச் சிரித்துக் கொள்ளுகிறேன். பிறவிகள் எத்தனையோ, ஏழு என்பது ஒரு எண்ணிக்கை மாத்திரமே. கண்ணதாசன் காலந்தோறும் பிறந்திருக்கிறார். இல்லாவிட்டால் அவரது கண்ணன் பாட்டுகள் ஆழ்வார்களை அழ வைத்திருக்காது.

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கண்ணனின் மேனி கடல் நீலம்

அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *