மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-97
————-
====================================
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்
====================================
பெருமிதமாகப் பணியாற்றிய புத்தனேரியார், ஓராண்டும் நீட்டிப்பு பெறாமல் ஓய்வு பெற்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் கவிதை வளர்ச்சி என்ற தலைப்புகளில் உரையாற்றச் சென்று மகிழ்ச்சியோடு தாம் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிய சில கணங்களில் அவர் உயிர் பிரிந்தது.
கலையுலகத்திற்குத் திலகமாகத் திகழ்ந்து மேலும் பல பணிகளை ஆற்றவல்ல நுண்ணறிவாளரின் மறைவைப் பலமுறை நினைவு கூர்ந்திருக்கிறோம்.
அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்கள். புத்தனேரியாரை பலமுறை அழைத்துப் பல செய்திகளைக் கூறியதை நானறிவேன்.
புத்தேனேரியாரின் படைப்பான காவிரி தந்த கலைச்செல்வி பெரிய அரசியல் திருப்பத்தையே தந்தது.

Add a Comment