POST: 2015-07-30T20:55:10+05:30

இந்தியப் பண்பாடு-22

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

ஆனால், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற சில மாற்றங்களை நம்முடைய நாட்டு மக்களால் அப்போது எண்ணிப் பார்க்கமுடியவில்லை. நம்மோடு உடன் பழகி வாழும் விலங்குகளையும் கூட உறவினர்களை அரவணைப்பதுபோல ஒன்றாக வைத்துக்கொண்டு தூய்மை, துப்புரவு முதலியவற்றை அவ்வளவு தூரம் எண்ணிப் பார்க்காமல் கோகுலத்தில் எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்று நீங்கள் கருதுகிற தூய்மை அல்லது மாசு நீக்கம் என்பதோ, வாழ்க்கையில் எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்து வாழவேண்டுமென்ற போக்கெல்லாம் எண்ணமுடியாமல் ஒரு கூட்டமாக வாழ்ந்துகொண்டு, அந்தக் கூட்டத்தில் மகிழ்ச்சியோடு வாழலாம் என்கிற கருத்தையும் வளர்த்திருக்கிறார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *