POST: 2015-07-17T09:33:58+05:30

இந்தியப் பண்பாடு-13

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

அண்ணன் தம்பியென்றோ, மைத்துனன் மாமன் என்றோ, உறவு சொல்லிக் காட்டுவதைவிட மனித வாழ்க்கையினுடைய செம்மை என்று எண்ணிப் பார்ப்பதை இந்தப் பண்பாடு சுட்டுகிறது. ஆனால், புறநானூற்றில், ‘‘ இதே சூழலில் எதிரே இருப்பது உன் மகன். நீ யாதொரு பகை பாராட்டுகிறாய், எனக்குப் பிறகு உன் மக்கள் தானே உன்னை நினைப்பார்கள். பகை என்பது நெஞ்சில் இன்று தோன்றி நாளை மறைவது – மறைய வேண்டியதல்லவா? எனவே வில்லையும் வாளையும் கீழே போடு’’ என்று சொல்லும் மனமாட்சி காட்டப்படுகிறது. பண்பாட்டில் இது ஒரு வகைச் செழுமையான மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *