அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-9
2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. சேக்ஸ்பியருடைய நாடக அரங்கம் அவருடைய காலத்தஜில் இருந்ததைப் போலவே வடிவமைக்கப்பட்டடிருந்தது. அது ஒலிம்பிக் கிராமத்தின் முகாமையான ஈர்ப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. சேக்ஸ்பியருடைய நினைவாலயங்களிலேயே மெய்மை மிளிர்ந்த காட்சியாக விளங்கியது. அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த கருவூலங்களுக்கிடையே, நெல்சன் மண்டேலா ரோப்பென் தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவர் படித்த சேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடக நூலின் படியொன்று அவருடைய நினைவுக்குறிப்புகளுடன் வைக்கப்பட்டிருந்தது.

Add a Comment