புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் மேத்யூ ஆர்னால்டு இக்கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார்,
‘‘ஏனைய கவிஞரெல்லாம்
எமது கேள்விகளைக் கவனித்தில் கொள்கின்றனர்;
நீங்கள் கவலைப்பட்டதில்லை!
நாங்கள் கேட்கிறோம், கேட்கிறோம்,
கேட்டுக்கொண்டே இருக்கிறோம்,
நீங்கள் புன்னகைக்கிறீர்கள்,
அதிலும் கலை மிளிர்கிறது!’’
‘‘அவருடைய பேராண்மை
விண்மீண்களின் மகுடங்களைப் பறித்தன!
ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்மேல்
அவருடைய விரைந்ததிரும் பாதச்சுவடுகள் பதிந்தன!
விண்ணுலகத்தின் விண்ணுலகினைத்
தனது வசிப்பிடமாகக் கொண்டவர்!
கருமேகக் கூட்டங்களை மட்டுமே
தனது அடித்தளத்தின் எல்லையாக விட்டுவைத்திருந்தார்!
கவ்விப்பற்ற எத்தனித்த காலதேவன்
களைத்துச் சுருண்டுவிட்டான்!
விண்மீன் கூட்டமும் கதிரவனின் கற்றைகளும் கூட
உங்களைக் கண்டறிந்ததில்லை!
தானே கற்று, தானே ஆய்ந்து, தானே மதிப்படைந்து,
தன்னைத் தானே காத்து நிற்பவர்!
எவருக்கும் புரிபடாத புதிராக
இந்தப் பூமியில் உலவினார், அதுவே அவருடைய சிறப்பு!
வலிகள் அனைத்தையும் சாவறியா ஆர்வத்தையும்
தாங்கி நின்றார்!
அனைத்துவகைத் தளர்ச்சிகளும் வலுவிழந்தன;
அனைத்துவகைத் துன்பங்களும் மண்டியிட்டன;
நெறித்ததிர்ந்த வெற்றிப் புருவத்தில்
தமது ஒற்றைக் குரலைக் கேட்டன!’’
மேற்கண்ட பாடலில், ஆர்னால்டு, சேக்ஸ்பியரிய மாமேதை பியர்செய்ல் லோகன் ஸ்மித்தைப் போலவே, ஏனைய அறிஞரெல்லாம் ‘எமது கேள்விகளைக் கவனத்தில் கொள்ளும் பொழுது’, அதாவது, எமது மதிப்புரைகளை, தீர்ப்புகளை எதிர்நோக்கும் பொழுது, சேக்ஸ்பியர் ஒருவர் தான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, அதாவது, கேள்விகள், பகுப்பாய்வுகள், கூர்ந்தாய்வுகள், தீர்ப்புகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

Add a Comment