பொது நல ஆர்வலராக சுழற்கழகத்தின் சுழலும் தேனியாக சமய ஆர்வமும்,சமுதாய நலமும் கொண்ட நண்பர் திருச்சி கோபிநாத் இன்று காலை திடுமென
மறைந்தார்.
காலஞ்சென்ற ரங்கராஜன் குமாரமங்கலம்,அரசியல் வாணரும்,தணிக்கை யாளுருமான குருமூர்த்தி,
இல கணேசன்,திருச்சி சிவா பல இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நெருங்கிப்பழகி கலகலப்பாக கூட்டத்தோடு வாழந்தவர்,மறைந்து விட்டார் .
வாழ்வது நம் கையில் இருக்கிறது என்பதை தெரிந்த கொள்ளாமல் காலம் செல்ல செல்ல ஆறு வற்றி விடுகிறது என்கிற விழிப்பில்லாமல் தடுமாறுவது பல
பேரை வீழ்த்தி விடுகிறது என்ற ரோமபுரியின் மன்னன் மார்கஸ் அரேலியஸ் தொடர் தான் நினைவிற்கு வருகிறது.

Add a Comment