அடிக்கடி நண்பர்கள் சூழ அமர்ந்திருப்பார் என் தந்தை,அவருக்கு ஆயிரம் சிந்தனைகள் எந்த நாட்டைப்பிடிக்கலாம் என்பது போன்ற
மாவீரன் அலெக்சாண்டரின் மனம்.
வரும் நண்பர்கள் எல்லாம் தளபதிகளாக நிற்பார்கள்.வருகிற ஒவ்வொருவரின் உடலிலும் தாங்க முடியாத தழும்புகள்,மனவலிகள்…
இப்படிப்பட்ட நெருப்புத்துண்டுகளை யாரால் அணைக்க முடியும்?ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீபந்தத்திற்கு இந்த தீக்குச்சிகளும் சேர்ந்து எரியத்தான் வேண்டும்.

Add a Comment