அரசர்கள் காலத்திலிருந்து இன்று வரை கோயில்களில் திருவிழாக்கள் என்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகின்றன. வருடந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. தமிழ்நாட்டில் விசயநகர, நாயக்கரது காலத்தில் திருவிழாக்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு பல புதிய திருவிழாக்கள் தொடங்கப்பட்டு கொண்டாடப்பட்டன. அவர்கள் காலத்தில் வசந்த உற்சவம், இறைவன் – இறைவியின் திருமண விழா, தெப்பத் திருவிழா, சிவராத்திரி, தேர்த்திருவிழா என விழாக்களும் தொடங்கப்பட்டன.

Add a Comment