முதுமை என்பது மனத்தால், குணத்தால், பழக்கத்தால் சுற்றுச்சூழலால் விளைவதாகும் என்று நம்பினர். உங்களுக்கு ஏன் நரை தோன்றவில்லை என்று கேட்டதற்குப் பிசிராந்தையார் கூறிய விடைப்பாடல் புறநானூற்றில் குறிப்பிடத் தக்கது.
மாட்சியுடைய மனைவி, அறிவு நிரம்பிய மக்கள் எனக்கு வாய்த்த என் மனத்தைக் கவரும் அண்ணன் தம்பியர் நல்ல ஆட்சி நடத்தும் வேந்தன், சான்றோர்கள் என்னைச் சுற்றி வாழ்கிறார்கள். இதுதான் நரை வராமைக்குக் காரணம் என்பது பாடலின் பொருள்.

Add a Comment