நல்லது செய்தல் ஆற்றீர்! உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் அறிஞர்கள் அவையத்தின் நான்காம் தொடர் நிகழ்வில் 29.8.25 வெள்ளிக்கிழமையன்று பங்கு கொண்டு பல்வேறு அறிஞர்கள் பயன்பாட்டுத் தமிழியல் குறித்து நேற்று இன்று நாளை நடந்த,நடந்து கொண்டிருக்கிற, நடக்கப்போகிற நிகழ்வுகளை மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். ஒரு நாள் முழுவதும் உற்றுக் கேட்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நிகழ்வின்போது வெவ்வேறு தருணங்களில் எடுத்த ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
POST: 2025-08-29T07:32:42+05:30
மங்கலம் என்ப மனமாட்சி உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் பாரதி என்னும் படிக்கே ஆட்பட்டு அப்பாவால் பாராட்டப்பட்ட நினைவில் வாழ்ந்த சொல்லின் செல்வர் பாரதி சுராஜ்(1928-2018) அவர்களின் திருமகன் இராமசாமி சுராஜ் திருமதி பூமா இணையரின் செல்வ மகள் மருத்துவர் அம்ருதா / மருத்துவர் கேசவ் திருமணம் 28.08.2025, வியாழக்கிழமை, காலை 9.00 மணியளவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். மங்கல நிகழ்வில் பாரதி சுராஜ் அவர்களின் அருமை தங்கையும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், இனிய நண்பர் வழக்கறிஞர் சதிஷ ...
POST: 2025-08-28T08:59:45+05:30
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் நடத்தும் தமிழ் வார விழா ஒருநாள் ஆய்வரங்கம் தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியம் போற்றுவோம் - பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகள் தொடக்க விழா வரவேற்பு : முனைவர் கோ. பழனி பேராசிரியர் - தலைவர், தமிழ் இலக்கியத்துறை தலைமை : முனைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பேராசிரியர் - தலைவர், ஆங்கிலத் துறை உறுப்பினர் ஆட்சி மன்றக் குழு, துணைவேந்தர் பொறுப்புக் குழு சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்புரை : வழக்குரைஞர் அ. அருள்மொழ ...
POST: 2025-08-27T07:32:02+05:30
உருகெழு யானை உடைகோ(டு) அன்ன... எனத் தொடங்கும் வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது திருஎழில் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது
POST: 2025-08-26T07:49:15+05:30
செய்தி வெளியீடு எண்: 1987 நாள் : 25.08.2025 செய்தி வெளியீடு திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல் தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆம் பிறந்தநாள் 26.8.2025 செவ்வாய்க்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள ...
POST: 2025-08-25T11:21:08+05:30
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் இலக்கிய, இலக்கணப் பயிற்சிப் பட்டறை 22.08.2025 | ~ 10.00 மணி சாராபாய் கலாம் திரையரங்கம் குமரகுரு வளாகம் அழைப்பிதழ் தொடக்கவிழா வரவேற்புரை : முனைவர் இரா. அன்பரசி துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை. கோயம்புத்தூர் முன்னிலையுரை: தீபேஷ் சந்திரசேகரன் முதல்வர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் தலைமையுரை திரு. பி.கே.கிருஷ்ணராஜ : வாணவராயர் தலைவர், கும ...
POST: 2025-08-24T11:01:11+05:30
ஆய்வும் -செயலாக்கமும் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை 19.8.2025 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதுரை மாநகராட்சி அலுவலகம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை காவல் ஆணையர் அலுவலகம். ஆகிய மூன்று அலுவலகங்களிலும் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை தத்தம் உயர் அலுவலர்களிடம் வழங்கியதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட் ...
POST: 2025-08-23T07:27:49+05:30
ஒளிப்பட உலா 18.7.25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருத்திட்ட வளாகத்தையும் அருகிலிருக்கும் சங்கக் காட்சிக் கூடத்தையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
POST: 2025-08-22T08:13:41+05:30
பல்லாண்டு பல்லாண்டு ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் நயவுரை நம்பி அவர்களை 15.8.25 வெள்ளிக்கிழமையன்று அடையாறு இல்லத்தில் காலை 8 மணியளவில் சந்தித்து 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
POST: 2025-08-21T09:31:10+05:30
நக்கீரர் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடத்தும் முப்பெரும் விழா 79-ஆவது இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.இரா.முகுந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம் கவிஞர் மு.ஞா.செ. இன்பா எழுதிய நூல்கள் வழங்கும் விழா அழைப்பிதழ் நாள் : 19.08.2025, செவ்வாய்க் கிழமை நேரம்: மாலை 06.00 மணி இடம் : கற்பகம் ஹோட்டல் அரங்கம், தெற்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை -600 004 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி. எஸ் ...
