சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை

தினமணி- 17.12.2022. பக்கம் எண் -8 சுருங்கிப் போனதோ சுருக்கெழுத்துமுறை முனைவர் ஔவை அருள் ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும். தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலை களாகும். சுருக்கெழுத்து என்பது நுண் கலையாகவும் பயன் கலையாகவும் விளங்குகிறது. வாழ்க்கையில் உயரிய பணிகளைப் பெற, இக்கலைப் பயிற்சி பெரிதும் உதவும். இதன் இன்றியமையாமை பல நிலைகளில் விளங்கும். பழங்காலத்தில் புலவர்கள் தம்முடைய பாடல்களை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல, அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலைய ...

ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளிவிளக்கு !

தினமணி - தமிழ்மணி பகுதி - 8.5.2022 பக்கம் எண் : 6 ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளிவிளக்கு ! மே 7 - கால்டுவெல் பிறந்தநாள் திராவிட மொழிகளுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில் அதனை மறுத்து திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவி, தமிழ் மொழியின் தனிப்பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் கால்டுவெல்லையே சாரும். சம்ஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக்குடும்பம் உண்டு என்றதோடு, தமிழில் சம்ஸ்கிருதமும், இ ...

இளவரசர் எடின்பரோ கோமகன் !

தினமணி நாளிதழில் 4.5.2021 அன்று வெளியான " இளவரசர் எடின்பரோ கோமகன் ! " என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 இளவரசர் எடின்பரோ கோமகன் ! கிரிக்கெட் ஆட்டத்தில் 99 ஆவது ஓட்டங்களை முடிக்கும் நேரத்தில் நம்மை ஏமாற்றும் படி எதிர்பாராத ஆட்டமிழப்பு ஏற்பட்டால் பார்வையாளர் அனைவரின் மனமும் பதறும் தவிக்கும் . அதுபோலவே இன்னும் இரண்டு மாதங்களில் நூறாம் அகவையைத் தொடுவார் என்று நாடே ஆர்வம் ததும்ப நம்பிய வேளையில் எடின்பரோ கோமகன் மறைந்தது அரச குடும்பத்துக்கு மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றுக ...

நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !

தினமணி - 1 - 4 - 2022 - நடுப்பக்கம் இரண்டாம் கட்டுரை - பக்கம் எண் 6 நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் ! முனைவர் ந அருள் உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் , உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு நிறுவப்பட்டது. ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோர் நீண்ட காலமாக சந்தாதாரர்களாக இருந்தனர். குழுந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணர்த்தியிருந்தனர். நானும் , என் சகோதரர்களும் இந்த இதழின் கட்டுரைகனை விரும்பிப் படித்தோம். இந்த இதழில ...

திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும்

தினமணி 2.1.2021 நடுப்பக்கம்-6 திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் ----------------------------------------------------------------------- இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார் .திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் . ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் - திருக்குறளுக்கும் - நாலடியாருக்கும் - புறப்பொருள் வெண்பாமாலையில் 59 பாடல்கள ...

வாசிப்புப் பழக்கமே – வாழ்வை வளமாக்கும் !

தினமணி - 27 - 9 - 2021 - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 வாசிப்புப் பழக்கமே - வாழ்வை வளமாக்கும் ! அண்மைக் காலமாக, நம்மிடையே புதிய நூல்களைத் தேடி வாங்குவதும் ,புதிய நூலை நூலகங்களில் எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன . அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது , நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன . ஆனால், இந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை . மின்னணு ஊடகம் - அச்சு ஊடகத்தின ...

மாந்தர் பெற்ற மகத்தான வரம் !

தினமணி - பக்கம் எண் : 6 - நாள் : 21 - 2 - 2022 இன்று ( பிப்ரவரி - 21 ) உலக தாய்மொழி நாள் - குறித்து வெளியிடப்பெற்ற சிறப்புக்கட்டுரை மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! முனைவர் ஒளவை அருள் இயக்குநர் மொழிபெயர்ப்புத்துறை தமிழ்நாடு அரசு தாய்மொழி என்பது உலகில் மாந்தர் மட்டும் பெற்ற மகத்தான வரமாகும். மனித இனத்தில் உணர்தம், புரிதல் என்ற நிலையிலிருந்து அறிதல் என்ற அடுத்த உயர்நிலைக்குப் புலன்கள் பெற்ற உணர்வுகளைத் தரும் உள்ளுணர்ச்சியின் ஊற்றாகும் . எண்ணங்களுக்கும் மனத்தில் ஓட்டத்திற்கும் அடிப ...

நூறாண்டு நிறைந்த – தேசியத் தமிழ் வளர்த்த திலகம் !

தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு ) " தமிழ்மணி " - ( பக்கம் எண் - 6 ) . பகுதியில் வெளியான ஒளவை அருள் எழுதிய தேசியத்திலகம் கு ராஜவேலு குறித்து வெளியான கட்டுரை நூறாண்டு நிறைந்த - தேசியத் தமிழ் வளர்த்த திலகம் ! ஒளவை அருள் அறிஞர் இராஜவேலு நினைத்திருந்தால் தமிழ்நாடு மாநில காங்கிரசுத் தலைவராக அமர்ந்திருக்க முடியும் .கருதியிருந்தால் கல்வியமைச்சராக பொறுப்பேற்பது அவருக்கு அப்போது எளிது .விரும்பியிருந்தால் இந்திய ஆட்சிப்பணிக்கு அவர் எப்போதோ தெரிவு செய்யப்பட்டிருப்பார் . அனைத்தையும் விலக்கி வ ...

நயம்படு சொல்லறிவார் !

தினமணி - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 22 2 2021 நயம்படு சொல்லறிவார் ! பேராசிரியர் இரா பி சேதுபிள்ளையும்,இரசிகமாமணி டி கே சி யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள் . நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளர் . நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பர் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தார் . தென்குமரி மாவட்டம், தோவாளை வட்டம், தலைநகர் பூதபாண்டிக்கு அருகிலுள்ள சிறமடம் என்ற சிற்றூரில் நல்லபெருமாள் 1919 ஆம் ஆண்டு திசம்ப ...

ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு !

தினமணி - 28 - 11 - 2021 - ஞாயிறு - கொண்டாட்டம் - இணைப்பிதழ் - .பக்கம் எண் : 2 ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு ! முனைவர் ஔவை அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, . தமிழ் நாடு அரசு ஆப்பிரிக்க மண்ணின் மீதும் கருப்பின மக்கள் மீதும் தீராத அன்பு கொண்ட ஆப்பிரிக்க நாட்டின் எழுத்துத் திலகமான திரு. வில்பர் ஸ்மித் தனது 88-ஆம் அகவையில் இயற்கையெய்திய தகவல் ஆங்கில இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ‘ஜாம்பியா’ என்றழைக்கப்படும் மேற்கு ருடேசியாவில் 09.01.1933 அன்று பிறந்தவர் வில்ப ...