19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி…. பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின்றேன். இலண்டன் வாழ் தமிழர் அண்ணல் சக்திதாசனின் வழிகாட்டுதலால் தந்தையர் தினத்தைப் பற்றி ஓரிரு கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ‘தந்தையர் நாடென்னும் போதினிலேசக்தி பிறக்குது மூச்சினிலே’என்ற பாரதி வரிகள்தான் நமக் ...
மாசிலா மணியே வலம்புரி முத்தே !
மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வியர்வையையும், உதிரத்தையும், கண்ணீரையும் குடம் க ...
பட்டிமன்றம் – திரு அவ்வை நடராசன் உரை – கம்பன் விழா
https://youtu.be/Cgvh_8ZsnRs?si=JLaUC4wq24LtFn7J
சென்னை பாரதியார் இல்லத்தில்
சென்னை பாரதியார் இல்லத்தில் வைத்து 2000 - ஆம் ஆண்டு, என் நூல் வெளியிடப்பட்ட போது, அப்பாவும், அப்பாவின் நண்பர்கள்; இரா.ஜனார்த்தனம், இளவேனில், கலெக்டர் பாண்டியன் ஐ.ஏ.எஸ். மற்றும் பாரிஸ் ஜமால் பங்கேற்ற காட்சி….அப்பா ஆன்மாவுக்கு பிரார்த்திக்கும், ஜர்னலிஸ்ட் சோதுகுடியான்
நாளொரு நினைவும் பொழுதொரு நிகழ்வும்
எங்கள் தந்தையர் நாடு என்னும் பொழுது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே நல்லாருக்கும் பொல்லாருக்கும்நடு நின்ற நடுவாய் எல்லாருக்கும் பொதுவாய் நின்ற புலமைநலச் செல்வர் எங்கள் தந்தையர்தமிழ்க்கடல் ஔவை நடராசன் அவர்கள் எங்கள் மூவரின் நினைவுகளில் என்றென்றும்நீக்கமற நிறைந்துள்ளார் வாழ்க அப்பாவின் புகழ் ஔவை கண்ணன்ஔவை அருள்ஔவை பரதன்15.6.25 ஞாயிற்றுக்கிழமை
தமிழ்க்கடல் ஔவை நடராசன் பிறந்த நாள் புகழ் வணக்கம்
(24.04.1936-21.12.2022) தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார்ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும்முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தேஎன்றும் நும் நினைவில் கண்ணன்அருள்பரதன். அப்பாவின் 90 ஆம் பிறந்த நாள் நினைவாக (24.4.25 ) வியாழக்கிழமை அன்று இல்லத்திலுள்ள மிகைப்பிரதியான 100 நூல்களை அண்ணா நகரில் உள்ள அரசுக் கிளை நூலகத்திற்கு கொடையாக அப்பாவின் தனிச்செயலாளர் பொன்னேரி பிரதாப் வாயிலாக வழங்கப்பட்டது… அவ்வண்ணமே தமிழ் ...










