882c9625-50bd-4497-a904-148941a6e384

திருப்பாவை பேருரை

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

===================================

பாடல் – 2

========

  1. வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

  • திருப்பாவை செய்யுள்.2

எதைச் செய்தாலுமே நல்ல முறையில் திருத்தம் உறச் செய்ய வேண்டும். “செய்வன திருந்தச் செய்“ என்ற பழமொழி எதைச் செய்யவேண்டும். எப்படிச் செய்யவேண்டும்? எனக் கருதுதல் நல்லது. “செய்தக்க அல்ல செயக்கெடும். செய்தக்க செய்யாமையானும் கெடும்“ என்பர் திருவள்ளுவர். கொள்ளுவன, தவறுவன, அறிந்து, தெரிந்து செய்வோரே வெற்றி பெறுவர். இங்ஙனம் விதிவிலக்கு அறிந்து செய்வது “செய்யும்முறை ஞானம்“ இதனையே “கிருத்யாகிருத்ய விவேகம்‘ஹ‘ என்பர் வடநூலார். ஆண்டாள், “நீராட ஆசை ஒன்றே போதுமானது. வருகிறவர்கள் அனைவரும் வாருங்கள்“ – என்று அழைத்தாள் அல்லவா? அப்ப வந்தவர்களைப் பார்த்து – நமது நோன்புக்குச் செய்யத்தக்கவை என்ன? செய்யத் தகாதவை என்ன? என்று சொல்லுகிறாள்“. நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ“ என்று ஆண்டாள், “நீராடப் போதுமின்“ என்று தோழியரை அழைத்தாள். கேட்ட தோழியருக்கு “கிருஷ்ணாநுபவமே“ அதன் உள்ளுரை என்று பட்டது. அதில், ருசியும் ஆசையும் உடையார் பலரும் ஓரூராய்த் திரண்டுவந்தனர். அதுகண்டு, அவளுக்குப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. அதற்கு உரிய காரணங்கள் பலவுண்டு. பொதுவாக, நல்லது சொல்லாரும் கேட்பாரும் உலகில் மிகவும் அரியர். இலங்கை அகப்பட விபிஷணன் ஒருவனே அப்படி இருந்தார். ஆனால், அதன்படி கேட்டவர் எவருமே இல்லை. “சீதையை விடுவது உண்டோ ! இருபது நிலத்தோள் உண்டால்“- என்று மறுத்தாள் இராவணன். ஆனால், இங்கு தன்னூல் கேட்டு, ஊராய்த் திரண்டது வியப்பிற்கு உரியது தானே ! நல்லதுக்கு நாலுபேர் என்பர். இங்கோ தோழியர் திரள் முழுவதுமே வந்து கூடிற்று. இவர்களை, நோக்கி ஆண்டாள் “வாழ்வீர்கான்“ என்கிறாள். வாழப்பிறந்தவர்களே- என்று கருத்து.

இவ்வுலகினை, இருள் தருமா ஞாலம்“ – கொடுவுலகம்“ என்றெல்லாம் கூறுவர் ஞானிகள் தன்னுள் அகப்பட்டோரை மதிமயக்கி இழிநிலைக்கு ஆட்படுத்தி அழியச்செய்யும். இதில் இருந்து தப்பி, பகவத் விஷயத்தில் ஈடுபடுவது – பாலை நிலத்தில், நீரூற்றுப் போலே அல்லவா? மானிடம் அறிந்து மடிவுருவண்ணம், ‘போதுமின்“ என்ற உடன் வந்தவர்கள் – “வாழப்பிறந்தவர்கள் தாமே!“ தேகமே ஆத்மா, போகமே புதுஷார்த்தம்“ என மருண்டு திரிவோரை “இறப்பதற்கே இருக்கின்றாரே“ என்றது ஒரு தமிழ்க்கவி. அவர்களோடு இவர்கட்கு உள்ள வாசி தெரியும்போது இவர்களை “வாழ்வீர்கான்“ என்று விளித்தது பொருந்தும். வெறும் வியப்பில் வந்த பேச்சில்லை. இனி, மற்றொன்றும் உண்டு.

எம் பெருமான் உகந்து எழுந்தருளியுள்ளே இடங்களே திருக்கோயில்கள். அவையுள்ள ஊர்களே ‘திவ்யதேசம்‘ எனப்படும். அங்கு குடியிருப்பு நமக்கு மிகவும் மேலானது. கோயில் இல்லா ஊரில் குடியிருப்பு தகாது. பிற இடங்களில் இருப்பது வாசம் என்றால், திவ்யதேசங்களில் இருப்பது வாழ்ச்சி ஆகும். “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்கான்“ என்று சுரம், சர்வேஸ்வரன் கண்ணனாய் அவதரித்துத் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறும் இடம் திருவாய்ப்பாடி. அங்குள்ளவர்கட்கு, வசிப்பதே வாழ்க்கையாகி மலர்ச்சிதரும் ஆய்ப்பாடியை வாழ்விடமாகக் கொண்டு வாழுவோர்களை “வாழ்வீர்கான்“ என்றதில், திருத்தமும் மிகவுண்டு. வியப்பில் வந்த புனைந்துரை என்று ஆகாது.

கண்ணன் பிறந்த காலத்திலே பிறப்பது. அவன் இருக்கும் ஊரிலே இருப்பது. இவை மட்டும் அன்றி, மேலும் தனிப்பட இவர்கள் பெற்ற பேற்றினை நினைத்து மகிழுகிறாள் ஆண்டாள். அவன் பிறந்த காலத்திலும், அவன் இருந்த ஊரிலும் பிறந்து இருந்து – அவன் விரும்பாத, முறட்டு ஆண்களாய் இருந்தால் பயன் என்ன? இல்லை. பருவர் முதிர்ந்த பெண்களாய் இருந்தாலும் பயன்தராது. அப்படிக்கு இன்றி, ‘கிருஷ்ணகடாக்ஷத்துக்கு இலக்கான கன்னிப்பருவம் வாய்த்தவர்களாய் இவர்கள் இருப்பது பெறுதற்கு அரிய பேறு அல்லவா? இதனைக் கருதி மகிழும் அவள், “உலகத்து உள்ளீர்“ என்னாமல் “வையத்து வாழ்வீர்கான்“ என்றது, சுவைமிகுதி உடையது. முற்கூறிய வாய்ப்பும் வசதியும் எல்லாம் இவளுக்கும் ஒத்தது தானே ! அப்படி இருக்க ஆண்டாள், “வாழ்வோங்கள்“ என்று தன்னையும் அகப்படப் பேசலாம் அல்லவா? அதைவிடுத்து முன்னிலையில் “வாழ்வீர்கான்“ என்பான் ஏன்? என்று கேள்வி எழும். உலகில் தாழ்வான விஷயாநுபவங்கட்கு மட்டுமே தனிமை தேவை. பகவத்விஷயத்தைப் பலரோடு கூடி அநுபவத்திலே தக்கது“ என்பது சாஸ்திரம். அப்படியானால் இத்தோழிமார்களது கூட்டுறவு இல்லையானால் அவளுக்கு பகவத்விஷயம் ரசிக்காது. இதனால், ஆண்டாள் தன் பகவதநுபவத்தை ரசமாக்கித் தருமவர்களது பெருமை நோக்கி, வாழ்வீர்கான்“ என்கிறாள்.

பாவை நோன்பு கன்னியர் அனைவருக்குமே பொதுவானது. நல்ல கணவனைப் பெறும் பொருட்டுச் செய்வது. அதில் ‘என் நோன்பு, உன் நோன்பு“ என்று கூறுதற்கு இடமில்லை. அப்படியிருக்க “நம்பாவைக்கு“ என்று ஆண்டாள் தனது ஆக்கிப் பேசுகிறாளே. இதில் ஆழ்ந்த கருத்துநயம் உண்டு. இவர்கள் நோக்பு இயற்றுவதில் உள்ள தனிச்சிறப்பினைச் சுட்டிக்காட்டும். உலகில் நமக்கு எல்லாம் முடிந்த முடிவு இறைவனை அடைந்து விடுபெறலே ஆகும். அவனை அடைந்து, அவன் மூலம் பிறிது ஒன்றினை விரும்புதல் தகாதது“ சிந்தாமணியே ! திருவேங்கடம் மேய எந்தாய் இனியான் உனை என்றும் விடேனோ“- என்று பாசுரம் அவளை, உபாயமாகப் பற்றி பொன்னும் போகமும் பதவியும் விரும்பும் வரை“- மாணிக்கத்தை விற்று தவிடு கொள்ளுவோரை ஒப்பர்“ என்பர் வைணவ பூர்வாசிரியர்கள். ஆகவே இறைவனை அடைந்து “அவனையே கணவனாக வேண்டும் என்று விரும்புகிற இவர்கள் நோன்பு தலையாயது இல்லையா?

“எங்கள் பெருமான்! ஒன்று உரைப்போம் கேள். எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க“- என்று திருஎம்பாவை. ஆனால், ஆண்டாளின் வேண்டுதல் என்ன தெரியுமா? பெருமானே ! நம்மிடையே இயல்பாக அமைந்த உறவு நாயகி நாயக பாவம். அது இம்மையில் மட்டுமல்ல, ஏழேழ்பிறவியிலும் தொடர்ந்து வருவது. ஆத்ம சம்பந்தமான அவ்வுறவு ஒழிக்க ஒழியாதது. நீயே எங்கட்கு கணவனாக வேண்டும். உனக்கு வேண்டிய பணிவிடைகள் நாங்களே செய்தல் வேண்டும். உன்னைத் தவிர பிற மானிடர் மீது எழும் காதலைமாற்றி உன்னையே அடையுமாறு செய்தருள்க“ – என்கிறாள் “உன் பொன் தாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் ! இற்றைப் பறை கொள்வாள் அன்று, ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம். உனக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று“ என்று திருப்பாவை இவ்வேறுபாடு சுட்டவே நம்பாவைக்கு என்று தனித்துப் பேசுகிறாள் ஆண்டாள்.

நம்மில் பலரும் நாள்தோறும் பூஜை, பஜனை, பாராயணம், ஆராதனம் எனப் பலவற்றைச் செய்து வருகிறோம். இவ்வுபாயங்களால் பகவானை அடைந்து விடலாம் என்கிறது நினைப்பு. ஆனால் இதற்கு முற்றிலும் மாறான உண்மை வேறு. தன்னை அடையத் தடையான இடையூறுகளைப் போக்கி, நம்மைத் தம்முடையவளாக்கித் தானே தேடிவந்து அடைகிறான். அன்றியும் நம்மை அடைந்த பேற்றுக்குத் தானே மகிழவும் செய்கிறான் – என்று இறைவன் செயல்முறையைச் சமய நூல்கள் தெளிவாகக் கூறும். “பாரமாய பழவினை பற்று அறுத்து வாரமாக்கி வைத்தான். வைத்தது அன்றி என்னுள் புகுந்தாள். கோரமாதவம் செய்தன்ன் கொல்? அறியேன்“ – தூர்த்தரோடு இசைந்த காலம். மாதரார் கயல்கள் என்றும் விலையுள்பட்டு அழுந்துவோனைப் போதரே என்று சொல்லி புந்தியுட்புகுந்து. தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்“ என்பன ஆழ்வாரது பாசுரங்கள். சைவசமயத்திற்கும் இதில் ஒத்த கருத்து உண்டு. விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் சிவலோகன்“ என்று திருவாசக நூல் கூறும். “அகம் த்வா சர்வபாபேயோ மோக்ஷ இக்ஷயாமி“ – என்று கண்ணனும் கீதையுள் கூறியுள்ள கருத்து இதுவே.

அப்படியானால் அடியார்கள் ஆகிய நாம் எதுவுமே செய்ய வேண்டியது இல்லையா? என்று கேள்வி எழலாம். இல்லை, நாமும் செய்ய வேண்டியது உண்டு “நாமும் செய்யும் கிரிசைகள் கேளீரோ“ – என்று ஆண்டாள் சொல்லவில்லையா? நாம் செய்யும் கிரிசைகள் என்னாமல் “நாமும்‘ என்ற உரைமைக்குப் பொருள். இறைவன் செயலோடு மட்டும் அன்றி நாமும் செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தலே எனலாம். குழந்தை பசிநேரம் அறிந்து தானே வந்து பாலூட்டுபவள் தாய். பால் நினைந்து ஊட்டும் தாய் சாலப் பிரிவுடையவள் இல்லையா? இந்த நேரத்தில், குழந்தை கையைக் காலை அசைத்து அழுது குரல் கொடுக்கவும் காணுகிறோம். குழந்தை இர செய்யவது தாய் பால் ஊட்டக் காரணமா? செய்யாவிட்டாலும், தாய் பால் தரத்தானே செய்வள். ஆனாலும் அறிவுடைய மக்கட்பிறவி ஆகையால் குழந்தை இது செய்யத்தான் வேண்டும். அழுது குரல் தராவிட்டால், தாய் தன் கடனே என்று குழந்தைக்குப் பால் தருவாள். அழுகையும் குரலையும் குழந்தைபால் கண்ட தாய் உவந்து தருவள். இந்த அளவு வேறுபாடு உண்டில்லையா? இறைவனும் இதைபோலத்தான். நாம் செய்யும் பூஜை பஜனைகளால் அவனுக்கு முகோல்லாசம் ஏற்பட்டு மனம் குளிர்ந்து அருள் செய்குவன். இதனால் “நமது ஸ்வரூப ஸித்திக்காக“ நாம் அவசியம் செய்யவேண்டிய ஸ்வாபவிசேஷங்கள்‘ என்பர் மேலோர். இது கருதியே ஆண்டாளும், ‘உவந்து நாம் செய்யும் கிரிசைகள்“ என்று கேட்டச் செய்தாள்.

“நாமும் – என்பதில் உள்ள நாம்“ என்பது ‘அகங்கார கர்ப்பம்“ உடையது இல்லை. தற்பெருமை சுட்டாமல் தங்களது ஸ்வரூப விசேஷத்தை குறிப்பதாகும். இறைவனையே“ உபாயமும் உபோயமும் எனக் கொள்ளுவர் மேலோர்“. பகவானை வேறு உபாயங்கள் மூலம் அடையாதவர்களாயும். பகவானை அடைந்தபிறவி வேறு ஒன்றை அவள் மூலம் விரும்பாதவர்களாயும் உள்ளவர்களுக்கு “பிரபந்தர்“ என்று பெயர். அவர்கள் மேற்கொண்ட நெறி “பிரயத்தி“ என்றும் சொல்லப்பெறும். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி‘ – என்பர் மணிவாசகர். அவன் திருவடிகளை நாம் வணங்கினோம் என்றால் அதுவும் அவன் செயலே என்று கருத்து“ உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உளத்து இருத்தல் பொருட்டு அவனை நெஞ்சுள் இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே“ – என்று பாசுதம். அதுபோல “நாராயணனே நமக்கே பறை தருவான்“ என்று “அவனாலேயே பேறு“ என்றிருக்கிற நாமும் – என்கிற வேறுபாடு சுட்டுகிறது இது. இதை ஒப்பவே – நம்பாவை“ என்றதும் விசேஷமான நோன்பு என்றதே கருத்து.பிறரை அழித்தற்குச் செய்யும் கும்பகருணன் முதலானோர் யாகம் போல இல்லை. பகவானும் அவனடியார்களும் வாழ்வதற்காகச் செய்யும் நோன்பு இது என்று பொருள்.

பாவை நோன்பிற்குச் செய்வன, தவிருவன எவ்வெவை என்று மேலே கூறுகிறான். நாட்காலே நீராடுதல். பரமன் அடியாடுதல். ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் இடுதல். உய்யுமாறு எண்ணுதல், அனைத்தினையும் உவந்து செய்தல் என்பன செய்யத்தகுந்தவை. மையிட்டு எழுதானை, மலரிட்டு முடியாமை, மேலையோர் செய்யாதன செய்யாமை. தீக்குறளை பேசாதிருத்தல்- ஆகியவை செய்யத் தகாதவை. இவற்றுள், செய்யக்கூடாதனவற்றையும்‘ செய்யும் கிரிசை‘ என்று பேசப்படுகிறது இல்லையா? பொய் பேசாமை. கனவு காணாமை என்று சொன்னால், பொய்யினைப் பேசாது இருத்தல். களவினைச் செய்யாதிருத்தல் என்றுதானே பொருள்? ஆக, இவையும் எதிர்மறை வாய்ப்பாட்டால் இருத்தலாகிய செயலில் அடங்கும். ஆகையால் “செய்யும் கிரிசைகள் என்று பேசியது பொருந்துவதே ஆகும்.

“கிரியை“ என்று செயலுக்குப் பெயர். இது ஒரு வடசொல். ஒரு மொழியில் பல காரணங்களால் பிறமொழிச் சொற்கள் வந்து புறங்கவே செய்யும். இது தருதற்கு இயலாதது. ஆனால், தமிழில் வரும்போது தமிழுருவம் தந்து நடமாட விட வேண்டும். இது தமிழிலக்கண நெறிமுறை. தமிழ் இலக்கிய மரபும் இதுவே ஆகும். இம்மொழிமரபு பேணியே, ஆண்டாள்“ க்ரியை என்பதை “கிரிசை“ என மாற்றி வழங்குவது காணலாம். செயல்திறம் கெட்ட ஒருவனை கிரிசை கெட்டவன் என்று கூறுவது நாட்டு வழக்கிலும் உண்டு. இங்ஙனமே, ‘தேஜஸ்‘ என்பதை “தேசம் உடையாய் திறவேவோர் எம்பாவாய்“ என்பள். குதூஹலம் – என்பது கோதுகலம் உடைய பாவாய்“ எனவும் வரும். உயரிய புலமையோடு நல்ல தமிழுணர்வும் கூடி அமைந்த அவளது திறமை வியக்கத் தக்கது இல்லையா?

மேலும் “செய்யும் கிரிசைகள்“ என்றதன் தொனிப்பொருள் மிகவும் சுவையுடையது. “செய்வனவும் தவிர்வனவும் ஆகிய இரு செயல்களையும் சேர்த்தே செய்தல் வேண்டும். ஒன்றை விட்டு மற்றொன்றை மட்டும் செய்தல் தகாது“ என்று வற்புறுத்தும் கருத்தது அது. தகாத செயல்களை மேற்கொண்டு, நீராடலும் பரமனடி தொழலும் பயனற்றது. அதேபோல, பரமனடி தொழலும் நீராடலும் செய்து மற்றைய தகாத செயலோடு கூடியிருந்தால் – அதுவும் பயன்தராது. எனவே, இவை தொடங்கி இடையே நிறுத்துமவை அல்ல. பலன் கைபுகும் அளவும் விடாது. பத்தும் பத்தாகவே செய்து தீரவேண்டும் என்பது உள்ளுறை‘ த்யாக மாத்ரத்தையே ஸ்வீகரித்து ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே நினைத்தபடியே நடக்கில் நாஸ்த்கத்துவமே பலித்துவிடும் அத்தனை“ என்றது. இவ்விடத்து வியாக்யான வாக்யம், எம்பெருமானது குணவிசேஷங்களில் ஈடுபாட்டால், பரமனடிபாடுகை முதலாயின எல்லாம் தடையின்றி தாமே அடுத்தடுத்து நெருங்கிவரும். இப்படி வருவதை “ஸம்பாவிதஸ்வா பாவங்கள்“ என்பர்.

நீராடல் ‘போதுவீர் போதுமிரோ“ என்றவுடன் ஒருவர் இருவராக அன்றி ஒரு ஊராக தோழியர்கள் வந்து திரண்டார்கள் இல்லையா? அதுகொண்டு, மற்றையோர்- பகவத் விமுகர் கோலாஷயத்திலே கிருஷ்ணநுபவத்திற்கு இத்தனைபேர் உண்டாவதே‘ என்று மகிழ்ச்சி மிக்கு மெய்ம்மறந்து இருந்தார்கள். அவர்களது கவனம் திரும்புகைக்காக“ கேளீரோ“ என்று திரும்பவும் சொல்ல வேண்டியது ஆயிற்று. மேலும், பகவத்விஷயம் சொல்லுவார்க்கும் கேட்பாருக்கும் இனியதாய் வீடு தர வல்லதாயும் இருப்பதால் கேளீரோ‘ என்று வற்புறுத்துவதாகுமாம். வைசம்பாயன பகவான் கிஷ்யனான ஜனமே ஜயனுக்கு மகாபாரதம் முழுமையும் சொன்னார். அதில், வரும் “சதுர்வித புருஷார்த்தங்களுள்“ எதை நீ விரும்புகிறாய் என்று முடிவில் அவளிடம் கேட்டார். ஜனமே ஐயன் பதில் கூறினார்.- நான் புருஷார்த்தமாகக் கருதுவது நான்குமில்லை. நான்கில் ஒன்றும் இல்லை. தேவரீர் பகவத் குணங்களைச் சொல்ல நான் இருந்து கேட்டதே புருஷார்த்தமாகக் கருதினேன்“ என்று செவிபடைத்த பயன் நமக்கு பகவத்குணங்களைக் கேட்டலும், வாய்படைத்த பயன் பிறர்க்கு அவற்றை எடுத்துச் சொல்லலும், ஆகும். நாங்களும், வாய்படைத்த லாபம் படைத்து, நீங்களும் செவிபடைத்த இலாபம் பெற வேண்டாவோ என்பாள், “கேளீரோ“ என்றாள்.

54a66d9c-f261-4772-bfc7-882335095754

ததும்பிய காதலும்-நிறைந்த வாழ்வும்

இன்றைய நாள் ( 10 – 12 – 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது

திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது.

59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்…

நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும்

அப்பா அம்மாவின்
ஞான ஒளியும் தொடர்ந்து
எங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி

              கண்ணன், அருள், பரதன்
ee0e5190-97dd-4615-bfdf-86c9ddae2066

அப்பாவின் ஈர்ப்பு -தொடர் காவியம்

அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்…

இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்கள் ஒளிப்படங்களுக்கு முன்
மலர் வணக்கம் செய்வதும்

தன்னுடைய சீருந்திலும் அப்பாவின் ஒளிப்படத்தினை அணி செய்து வணங்குவதையும் கண்டு நெகிழ்ச்சியுடன் எங்கிருந்தோ வந்தான் என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் உள்ளேன்.

089043e7-b3fa-42c2-9a73-cd1d1b274d81

எந்தை ஈராண்டு நிறைந்த எங்களின் சிந்தை

ஔவை நடராசன்

ஒளி 24.04.1935

நிழல் 21.11.2022

   எந்தை 

ஈராண்டு நிறைந்த
எங்களின் சிந்தை

பெருந்தகையீர்,

வணக்கம்.

உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஒளவை நடராசன் (21.11.2022) மறைந்து ஈராண்டுகள் நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 7.30 -09.00 மணிக்குத் ‘தாரகை இல்லத்தில்’
(ஜெ 82 இரண்டாம் முதன்மைச் சாலை அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102) இரண்டாமியாண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம்
ந. ஒளியரசு அவர்களின் வாயிலாக நடைபெறவுள்ளது.

நினைவேந்தலுக்குத் தவறாது வருகை புரியுமாறு நெஞ்சார அழைக்கிறோம்.

கண்ணன், அருள், பரதன்

WhatsApp Image 2024-11-19 at 7.31.06 PM (2)

ஈரண்டு… என்றும் எந்த நினதுருட்புகழின் நிழலில்

ஔவை நடராசன்
ஒளி 24.4.1935
நிழல் 21.11.22

கண்ணன் நடராசன்
சாந்தி கண்ணன்
தாரா நிகிதா கண்ணன்

அருள் நடராசன்
சாலை வாணி அருள்
அதிரை அருள்

பரதன் நடராசன்
நிசா பரதன்
இனியா பரதன்
கார்த்திக் பரதன்

        Avvai Naarajan

Birth 24.4.1935 Passed 21.11.2022

                 2 years 
        Always in Father's
         Graceful shadow

Dr Kannan Natarajan
Dr Shanti Kannan
Dr Tara Nikita Kannan

Dr Arul Natarajan
Salaivani Arul
Aathirai Arul

Dr Bharathan Natarajan
Dr Nisha Bharathan
Inia Bharathan
Karthick Bharathan

Makkal Kural 20.11.24 Page 1
Trinity Mirror 20.11.24 page. 1
The Hindu 21.11.24 page. 3
Dinamani. 21.11.24 page. 4

avvai3

நினைவோ ஒரு பறவை….

கலையுலக மார்கண்டேயர் நடிப்புச்செம்மல் ஓவியர்
திரு சிவகுமார் அவர்களின்
30 ஆண்டு ஆவணக்
குறிப்பிலிருந்து(12.9.1993)

எந்தையார்
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் கலந்து கொண்ட தினமணி நாளிதழின்
வைர விழாக் கூட்டத்தைப் பதிவு செய்ததை (23.4.24) புலன வழியாக எனக்கு அனுப்பி மகிழ்ந்த குறிப்புக் கண்டதும் நெகிழ்ந்தேன்…

‘தினமணி’ நாளிதழின் வைரவிழா ஆண்டின் துவக்கவிழா –

மதுரை
மதுரை ராஜா முத்தையா செட்டியார் விழாவில்

குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்க,

ஔவை நடராஜன்,
இந்திய வங்கி M. கோபாலகிருஷ்ணன், ஜெயகாந்தன், சிவசங்கரி, வைரமுத்து ஆகியோருடன் நானும் தினமணியின் சாதனையை பாராட்டி பேசினேன்.

நிர்வாக ஆசிரியர் விவேக் கோயங்கா, பொறுப்பாசிரியர் பிரபு சாவ்லா துணையுடன் சீனியர் எடிட்டர் சுதாங்கன் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார்.

சாலமன் பாப்பையா தலைமையில், ‘தினமணி’ அரசியல் விழிப்புணர்வு – பட்டிமன்ற விவாதம் சுவையாக மாலைநேரத்தில் நடைபெற்றது.

இன்று திருமணம் செய்து கொண்ட இளம் ஓவியர் சௌந்தராஜன் மனைவியுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றார்.

ரமேஷ்பாபு என்ற ரசிகரும் மனைவியுடன் வந்து வாழ்த்துப் பெற்றனர்.

வைரமுத்துவின் தலைமையில் மதுரையில் இலக்கிய மன்றங்கள் நடத்தும் இளைஞர்கள் பலரையும் சந்தித்தேன்.

avva natarajan book

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல்.

நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை, ஆளுமையை நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் பாராட்டுக்கள்.

இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது வாழ்நாளில் இன்னும் பல ஆண்டுகள் கூடி விடும் என்பது உண்மை.

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

நூல் ஆசிரியர் :

பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி,
இரண்டாம் முதன்மைச் சாலை, தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113.

பக்கம் : 156, விலை : ரூ. 100.

அறக்சொற்பொழிவு ( 28.2.2018)

நூல் விமர்சனம் :
கவிஞர் இரா. இரவி.
6.4.2018

படிக்கும் வாசகர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு கூடுதல் மகிழ்ச்சி கிட்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் அணிந்துரையும், மருத்துவர் கவிஞர் நரம்பியல் வல்லுநர் ஔவை மெய்கண்டான் இருவரின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன, பாரட்டுக்கள்.

நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பயின்றபோது பேராசிரியராக இருந்தவர் ஔவை துரைசாமிப்பிள்ளை.

ஔவை நடராசன் அவர்களுடன் பல இலக்கிய மேடைகளில் இருந்தவர்

அவரது மகன் முனைவர் ந. அருள் அவர்களுடனும் நட்பு உண்டு.

ஆக மூன்று தலைமுறையை அறிந்தவர் என்பதால் இந்நூல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

நூலில் உண்மை உள்ளது.

இந்திரன், சந்திரன் என்று துதி பாடாமல் உள்ளது உள்ளபடி சான்றுகளுடன் நிறுவி பதமஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் தமிழ்ப்புலமையை ஆற்றலை உயர்ந்த பண்பை புலப்படுத்தி உள்ளார்.

வரலாறு தொடங்கி தமிழ்த்தொண்டு வரை நூலில் உள்ளது.

நூலிலிருந்து சிறு துளிகள்.

“திருவண்ணாமலை மாவட்ட்த்தைச் சேர்ந்த செய்யாற்றில் ஔவை துரைசாமி – உலகாம்பாள் இணையரின் மூன்றாவது மகனாக 24-04-1936இல் ஔவை நடராசன் பிறந்தார்.

அவருடன் பிறந்த ஆண்மக்கள் அறுவர் ; பெண்மக்கள் நால்வர், ஆண்மக்களுள் இருவர் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போயினர் ;

பாலகுசம், திருஞானசம்பந்தன், நெடுமாறன் ஆகியோரும் மறைந்தனர்.

இப்போது ஆண்மக்களுள் திருநாவுக்கரசு, மெய்கண்டான் ஆகியோரும் பெண்மக்களுள் மணிமேகலை திலகவதி , தமிழரசி ஆகியோரும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்”.

நூலின் நாயகர் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் பற்றி எழுதும் போது அவர் எங்கு பிறந்தார்?
பெற்றோர் யார்?
உடன்பிறந்த சகோதர சகோதரி என எல்லா விபரங்களும் சேகரித்து பாங்குற பதிவு செய்துள்ளார்.

அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்திய பின்(28.2.2018) அதனையே நூலாக்கி வடித்துள்ளார்.

பேசிய உரையை கட்டுரையாக வடிக்கும் உத்தி நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு கை வந்த கலை.

அக்கலையால் மலர்ந்த சிலையே இந்நூலாகும்.

முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தம் பணிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் ஆகிய மூன்று முதல்வர்களை கண்டவர்,

மூவரிடமும் இசைந்து நின்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முதல்வர்களுடன் இசைந்து நின்று பணியாற்றியதே அளப்பரிய சாதனை தான்.

அதிசயம் தான்.

இதுபோன்ற பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.

ஔவை நடராசன் அவர்கள், மனைவியை மதிக்கும் பாங்கு நூலில் உள்ளது.

தாராவுக்கு ஈடாக இன்னொரு பெண்மகளை நான் காண முடியவில்லை.

தாராவைப் போல நூறு பேர் இருந்தால் தமிழகம் முழுவதும் மாற்றங்கள் பெற்று விடும்.

இப்படி மனைவியை மனதாரப் பாராட்டி உள்ளார்.

பொருத்தமான திருக்குறளை தேர்வு செய்தமைக்கு எம்.ஜி.ஆர். பாராட்டிய நிகழ்வு.

இப்படி நிகழ்வுகள் நூலில் உள்ளன.

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு, கர்ணனுக்கு கவச குண்டலம் போல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று கூறி அவர்து நகைச்சுவைகளையும் விளக்கி உள்ளார்.

சங்க இலக்கியங்களில் வரும் 41 பெண்பாற் புலவர்கள் பற்றி ஔவை நடராசன் அவர்கள் தொகுத்து எழுதிய விளக்கங்கள் நூலில் உள்ளன.

சங்க இலக்கியப் பாடல்களின் விளக்கம் ஒப்பீடு என ஔவை நடராசன் அவர்களின் ஆய்வு நூல்களை ஆய்வு செய்து கனிச்சாறாக வழங்கி உள்ளார்.

ஔவை நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் என்ற போதும் தமிழின் சுவைக்காக கம்ப இராமாயணத்தையும் ஆய்வு செய்து நூலில் வடித்துள்ள விதத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

கம்பர் காட்டும் மந்தரை, கம்பர் காட்டும் குகன் என்று கம்பரின் பாத்திரப் படைப்புகளின் சிறப்பை, சிறப்பியல்பை எடுத்து இயம்பிய விதத்தை எழுதி உள்ளார்.

வள்ளலார் பாடிய பாடல்களை மேற்கோள் காட்டி ஔவை நடராசன் வடித்திட்ட இலக்கிய விருந்தின் சிறப்பை விளக்கி உள்ளார்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமையின்றி வாழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி ஔவை நடராசன் அவர்கள் காட்டிய இலக்கியச் சோலையை நமக்குக் காட்சிப்படுத்தியது சிறப்பு.

பாரதியாரின் ஆங்கிலப் புலமையையும் பாராட்டி உள்ளார்.

பாரதியார் பன்மொழி அறிஞர். அதனால் தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை என்று பாட முடிந்தது.

அடுக்குமொழி உரையால் அடித்தட்டு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அறிஞர் அண்ணாவைப் பற்றி ஔவை நடராசன் அவர்கள் வசனங்களின் சிறப்பை எடுத்து இயம்பியதை எடுத்துக் காட்டி வடித்துள்ளார்.

வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்க்கு அவர் வாழும் காலத்திலேயே அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே அறிந்து கொள்ள வடிக்கப்பட்ட அற்புத நூல் இது.

76551b46-fbf8-466b-b790-47de484c04f4

அன்றாடம் அப்பாவுடன்

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின்
அரசு செயலாளராக
(1984 -1992)
அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்கு
மதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும்.

அந்நாட்களில்
சென்னையிலிருந்து
இரவு சரியாக எட்டு மணிக்கு
கே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்..

அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் …
பல மாற்றங்களைக் கண்டு வியந்தேன்..

நாள் முழுவதும் அப்பாவுடன் வந்து சென்ற நினைவுகளோடு நெகிழ்ந்தேன்