உள்ளார் தாரா அம்மா என்றும் உள்ளத்தில்! எங்கள் தாயே!எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே!அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும்அம்மா! அம்மா! அம்மா! அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும்எங்கள் தாரா அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்… கண்ணன், அருள்,பரதன்.
ததும்பிய காதலும்-நிறைந்த வாழ்வும்
இன்றைய நாள் ( 10 - 12 - 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது. 59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்… நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும் அப்பா அம்மாவின்ஞான ஒளியும் தொடர்ந்துஎங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி கண்ணன், அருள், பரதன்
மருத்துவ மாமணி தாரா நடராசன்(15.7.1932-14.8.2020)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் ! சேயாக எமை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம் ! எங்கள் கவலைகளைத் தம் கவலையாக நாளும் தாங்கிய தாயே ! பெருந்தகையீர்,வணக்கம், உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமைத்தாயார், மருத்துவர்,தாரா நடராசன் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டு ஆகும் நிலையில், ஆடித்திங்கள் பதினாறாம் நாள், 01.08.2024வியாழக்கிழமையன்று காலை 7.30 முதல் 9.00 மணிக்குத்தாரகை இல்லத்தில் நான்காமியாண்டு நினைவேந்தல், மரபுளி வழாது தமிழ் வேள்வி, ஒளி ...
மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள்
ஒளி 15.7.1932-நிழல் 14.8.2020 இன்று எங்கள் அமுத ஊற்றான அம்மாவின்தொண்ணூற்று இரண்டாம் பிறந்த நாள் எங்கள் தாயே!எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_ நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா! அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும் எங்கள் அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்… கண்ணன், ...
ஒளவை குடும்பத்தில் முதல் மருத்துவராக மின்னி மிளிர்ந்த தாரா நடராசன்
சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய் இணையற்ற ஒப்பனைக் கலைஞராய் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய் கொடும் பிணி நீக்கு மருத்துவராய் மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப் (1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின் தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற்றுகிறோம். ‘வாள ...






