தினமணி பக்கம் எண் : 15 10.02.2025 ஒளவையின் தமிழமுது- ஒளவை அருள்; பக். 390; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18; 044-43418700. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம். முன்னுரை, அணிந்துரைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்ன ...
POST: 2025-04-19T10:58:30+05:30
குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 பு(து)த்தகம் ஒளவையின் தமிழமுது ஔவை அருள் குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 ஒளவையின் தமிழமுது ஔவை அருள் தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும் காலப்பெட்டகமாகவும், கருத்தும ...
POST: 2025-04-18T11:03:35+05:30
மருத்துவம்+நற்றமிழ்+ திருத்தலப்பணி=நலங்கிள்ளி 23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போது கொற்கை கணபதி கொற்கை திருமகள் அருள்மிகு மருந்தீசர் அருள்மிகு நீலாம்பிகை ஒன்பாவை - கோள்கள் கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்தில ...
POST: 2025-04-17T12:13:35+05:30
சட்டமன்றப் பேரவையில் (16.4.25 ) தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந்திருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அரங்கத்திலே ப ...
POST: 2025-04-16T07:26:21+05:30
மழித்தலும் நீட்டலும் வேண்டா எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும் உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது
POST: 2025-04-15T08:24:33+05:30
மங்கலம் என்ப மனைமாட்சி தமிழ்நாட்டின் மாபெரும் சிற்பிகள் குடும்பத்தை சார்ந்த கிஷோர் நாகப்பாவின் மகன் மருத்துவர் ஹரிஷ் கிஷோர் 27.1.25 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இனிய பொழுது... அவ்வண்ணமே சென்னையில் நிறுவப்பெற்ற அன்னை வசந்தை என்று அழைக்கப்படும் அன்னிபெசன்ட் திருவுருவச் சிலை மற்றும் இந்து நாளிதழின் நிறுவனர் கஸ்தூரி ஐயங்கார் மார்பளவு சிலையினை சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கிய பெருமை சிற்பி கிஷோர் செல்லப்பாவின் பாட்டனார் வாயிலாக அமையப ...
POST: 2025-04-14T09:20:18+05:30
' அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆம் பிறந்தநாள் (14.4.25) சமத்துவ நாள் உறுதிமொழி 11.4.25 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அ ...
POST: 2025-04-13T11:15:30+05:30
காட்சியும்-மாட்சியும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு (1986-87) பயிலும் போது அதே கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் முதலாம் ஆண்டு பயில்வதற்க்கு இலயோலோ கல்லூரி மாணவரான டென்சன் எக்டர் இணைந்தார். அதே வகுப்பில் திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் மாணவத் திலகமாக அணி சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனமும் எண்ணமும் நிறைய மாணவ மாணவியர் முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர்ந்த பொழுது மாநிலக் கல்லூரியே களை கட்டியது. அந்தப் பெருங்கூட்டத்தில் தனி நிழலாக அன்பின் பெருக ...
POST: 2025-04-12T10:24:43+05:30
சந்தித்தேன்- சிந்தித்தேன் உலகம் முழுவதுமுள்ள தமிழறிந்தவர்கள் இல்லந்தோறும் உள்ளந்தோறும் போற்றிக் கொண்டிருக்கும் பட்டிமன்ற உலகின் பேரரசர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை அவருடைய இல்லத்தில் 9.3.25 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் கண்டு பல நிகழ்வுகளைக் குறித்து உரையாடினேன். உற்றுக்கேட்டார் சிரித்து மகிழ்ந்தார்.
POST: 2025-04-11T10:35:14+05:30
மாசு குறையாத மன்னவன் எங்கள் குமணன்! என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிகளை உயர்த்தி வியப்பாகப் பார்த்து மகிழ்வேன். பள்ளி மாணவனான குமணனை செனாய் நகர் நீச்சல் குளத்தில் மூழ்கிச் சென்று நீந்தும் கலையில் மருண்ட விழியுடன் மாமா பயிற்றுநர் உங்கள் நண்பர் தானே இம்முறை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பான் நான் சிரித்துக் கொண ...
