பண்டைத் தமிழ் நூலின் பண்பெல்லாம் ஈத்துவக்குந்
தொண்டுபுரி ஒளவை துரைசாமி – தண்டமிழ்க்கு
வள்ளல்! தனியாண்மைச் செம்மல் ! வாழ்கபல
வெள்ளங்கள் வென்று விழைந்து ! 1
வாயில் தமிழ் முழக்கம் வாழ்வில் தமிழியக்கம்
பாயில் துயில்போதும் பைந்தமிழே -நோயில்
படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணி செய்
தெடுத்ததுரை சாமி புகழ் ஏற்று! 2
அவ்வையைப் போற்றுதும் அவ்வையைப் போற்றுதும்
செவ்வை உரை செழித்த சீர்த்தியால்!-ஒவ்வாப்
பகைநலிய பன்னலமும் பைந்தமிழ் போல் ஓங்கத்
தொகையுரை வேந்து வாழ்க சூழுந்து! 3
-புலவர் தி. நா .அறிவொளி

Add a Comment