இந்தியப் பெருநாடு முப்பது மாநிலங்களுக்கு மேல் கொண்டதாகும். மாநிலங்கள் தத்தமக்கு உரிய கட்சிகளுக்கு வாக்களித்து அரசமைத்துக் கொள்கின்றனர். அயல்நாட்டு உறவு பாதுகாப்பு சில நிலைகளில் கல்வி முதலியன நடுவன் அரசின் ஆணையில் உள்ளன. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் இணைந்த ஒரு பொதுமையைத்தான் நாம் தேசீயம் என்கிறோம். (NATIONAL) வானொலியைக்கூட அனைத்திந்திய வானொலி என்று வழங்குகிறோம். அனைத்திந்திய என்பது தான் தேசியமாகும்.

Add a Comment