POST: 2015-02-05T11:41:51+05:30

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
(ஸ்ரீராம் நிறுவனங்களின் ஓர் அங்கம்) தொடர்ந்து 27 ஆண்டுகளாக
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்துகினறனர் .இந்த ஆண்டு மகாகவியின் 133 ம் பிறந்த நாள் விழா 7.2.2015,சனிக்கிழமை,மாலை 5.15 மணிக்கு
தியாகராய நகர்,ஸ்ரீ கிருஷ்ண கான சபை அரங்கில் நடைபெறும்.

மாலை 5.15-மகாகவி பாரதியார் பாடல்கள் -லால்குடி ஸ்ரீ ஜெயராமன் அவர்களின் மாணவிகள்
6.05-இறை வணக்கம்
6.10-வரவேற்புரை :முனைவர் ஔவை நடராசன்
6.25-வாழ்த்துரை-மாண்பமை நீதியரசர் டி.என் .வள்ளிநாயகம்
உயர்நீதிமன்ற நீதிபதி (ஒய்வு)
பாரதி புகழ் பரப்பிவரும் அறிஞர் பெருமக்கள் மூவர்க்கு விருதுகள் வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டிச் சிறப்பிப்பார்

விருது பெறுவோர்
1)திரு ஞானராஜசேகரன் இ.ஆ.ப
திரைப்பட இயக்குநர்
2)திரு .கிரேசி மோகன்
நாடக நடிகர்,திரைப்படக் கதாசிரியர்
3)திருமதி வத்ஸலா விஜயகுமார்
தமிழறிஞர்,கவிஞர்

6.45-பேச்சு போட்டியில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு,சான்றிதழ் வழங்குதல்
6.55-முதல் பரிசு பெற்ற மாணவர்களின் பேச்சு
7.25-உயர்திரு.இல.கணேசன் அவர்கள்
(தலைவர்,பொற்றாமரை ) பாரதி கண்ட அறிவியல் என்ற நூலை வெளியிட்டு பாரதி கண்ட
பாரதம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார் .
8.15-நன்றியுரை

நிகழ்ச்சித் தொகுப்பு :டாக்டர் பால சாண்டில்யன்
நிகழ்ச்சி ஒளிப்படப் பதிவு :கலைமாமணி யோகா

அனைவரும் வருக!பாரதிப்புகழ் பெருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *