தொழிலாளி
மொழியைச் செம்மையாக,அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க,மொழிப்பயிற்சி அவசியம்.
சிறப்பு ழ கரத்தைச் சரியாக உச்சரிக்க,வாழைப்பழம் நழுவி அழுகிக் கொழுகொழுத்துக் கீழே விழுந்தது எனும்
வாக்கியத்தைப் பயிற்சிக்காகக் கொடுப்பது நாம் அறியாததல்ல.
இதைப்போல்,தமிழில் ல,ள ,ழ மூன்றும் அடுக்கிவரும் ஒரு சொல் தொழிலாளி ஆகும்.
உச்சரிப்பு முயற்சிக்கு இச்சொல்லைப் பயன்படுத்தினால்,
உழைப்பவரை நினைவு கூர்வதும் நிகழும்.
ல,ள ,ழ ஆகிய எழுத்துகளின் நா ப் பழக்கமும் நன்கு கைகூடி வரும்.
டாக்டர் ஔவை நடராசானர்-தமிழ்ப்பல்கலைக்கழகம் -1992

Add a Comment