முனைவர் ஔவை நடராசன் உரை-4
தலைவர் திருமாவளவன் அவர்கள் மாணவராக இருந்தபோதே நான் பார்த்தவன். திருமாவளவன் அவர்கள் மாநிலக் கல்லூரியில் மாணவனாக இருந்து, மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்து, ஒரு இளைஞர் தமிழகத்தில் எப்படி எழுச்சித் தமிழராக வருவார் என்பதை, ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதைப்போல் அப்போதே பார்த்தோம். எனவே, நீங்கள் அப்போது மாணவர் தலைவனாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவராக இருப்பதைப் பார்க்கின்றேன். இது இன்னும் முடியவில்லை, இன்னும் பல நிலைகளில் நீங்கள் தலைவராக வரவேண்டும் என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.
நன்றி.
வணக்கம்.

Add a Comment