சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-18
– பீட்டர் குயென்னெல்
சேக்ஸ்பியரின் வெற்றிக்கான விந்தைகள் பல. அவர் தனது காலத்திய சிந்தனைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட போதிலும், தனது சுவைஞர்களுடைய அறிவாற்றலை விஞ்சி மேலெழுந்தார். தான் பெற்ற அறிவாற்றலின் போக்கில் செயல்படுவதற்கு அவரால் முடிந்தது. நடைமுறைப் பயன்களை உயர்ந்த அளவில் விளைவிக்கும் நோக்குடன் தனது திறமைகள் அனைத்தையும் வியக்கத்தக்க விதத்தில் கையாண்டார்.
சேக்ஸ்பியர் தனது காலத்திற்கு உரிய முறையில் கலைப்பணி ஆற்றினார் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அவர் அக்காலத்தின் வரம்புகளைக் கடந்தும் செயல்பட்டு ‘
‘என்றென்றும் வாழும்” கலைஞராகப் பரிணமித்தார்.

Add a Comment