POST: 2015-11-27T23:12:10+05:30

முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்

வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-1

முனைவர் க.பலராமன் அவர்களைச் சில திங்களாகத்தான் அறிவேன். மதிநுட்பம் நூலோடு உடைய அதிநுட்பம் வாய்ந்த திறனாளராக அவர் திகழ்வதை என்னால் உணர முடிந்தது. வானியல் பார்வையில் சங்க காலம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைக் களஞ்சியத்தைப் பாராட்டி மகிழ்கிறேன். தொல்காப்பியம் மொழி இலக்கண வரம்பு காட்டும் நூல் என்றாலும், சங்கத் தமிழரின் வான நூல் நுணுக்கத்தைக் குறிப்பாகச் சுட்டும் இடங்கள் உள்ளன. சங்க காலப் பாடல்கள் சிலவற்றில் அவற்றின் விளக்கங்களைக் காணலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *