புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-15.
ஆக, இந்த எண்பது ஆண்டு காலம் என்பதும், எட்டுப் பத்து ஆண்டுகளாகத்தான் என்று நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால், இன்னும் வாழ்விருந்தால், இன்னும் அளப்பறிய ஊக்கம் இருந்தால், இந்த காட்சியெல்லாம் கொஞ்சம் நீங்குமானால், இன்னும் கூட நான் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றுவதை வளர்த்துக்கொள்ள முடியும்.
இப்போது நான் நெடுந்தொலைவு சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கு, வாய்ப்பில்லாதபடி இருக்கிறது. யாராவது ஒருவர் என்னுடன் வர வேண்டும், என்னை தோள் தொட்டு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்கிற நிலை இருப்பதனால், தளர்ச்சி என்பது மன நெகிழ்ச்சியைத் தருகிறது. ஆனாலும், தமிழ்க்கூட்டங்களைக் காணும்போது, அந்த மகிழ்ச்சி பெருகி வருகிறது. எனவே, எண்பது ஆண்டுகள் என்று பார்த்தால், இந்த எட்டு என்ற கணக்கு முடிகிறது. புதியதாக ஒன்பதை நோக்கி கணக்கு தொடங்குகிறது என்ற மகிழ்ச்சி என் உள்ளத்தில் படருகிறது.
வணக்கம்.

Add a Comment