POST: 2017-05-03T09:02:53+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-25
————-

ஒலைநறுக்கின் ஆயுட்காலம் நாற்பதாண்டுகள்தான். பொடிப்பொடியாகி விடும். போலியான ஒலைச்சுவடிகளைத் தயாரிப்பதும், இது போன்ற புரட்டுகளை எழுதுவதையும் நம்புவதற்கு இடமில்லை என்று சொன்னேன். ஒருதடவை பார்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அதற்கான செலவு, ஞாபகத்தில் இல்லை. எப்படியாவது அந்த ஒலைச்சுவடியின் காலத்தை கண்டறிய வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அதில் எழுதியிருப்பது என்னவென்று பார்த்தால், பொருள் விளங்காத ஏழெட்டு பாடல்கள் மற்றும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல். சீகாளத்துப் புராணம் என்று எதிலிருந்தோ ஒரு பாடலை எடுத்து, நான்கு ஒலைநறுக்குகளில் எழுதியிருக்கிறார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒலைச்சுவடி அது என்று பம்பாயில் இருந்து ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதைக் குறிப்பிட்டேன். நீங்கள் சொன்னது உண்மைதான். இப்படியொரு பொய்மை கூட, தமிழ்நாட்டில் நடக்கிறதே என்று சொன்னார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *