மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-55
————-
ஜெகத்ரட்சகனை என்னுடைய இளவல் என்று சொல்லலாம். மகன் என்று நான் மிகுந்து மகிழ்ச்சியோடு குறிப்பிடுவேன். ஜெகத்ரட்சகனின் மனம், குணம், அவரது திருமணம், வளர்ச்சி என்று எல்லாவற்றையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவன் நான்.
எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டவர். எப்போதும் புன்னகையோடு, ஒரு கணம்கூட, உழைக்கத் தயங்காதவர் ஜெகத்ரட்சகன்.
அக்காலத்திலேயே அவருக்கு எம்.ஜி.ஆர். மீது அன்பு வந்துவிட்டது. தோட்டத்திற்குப் போய், பார்த்துவிட்டு வருவார். அந்தநேரம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த வேளை. அவருடைய நாணயத்திற்கும், நம்பிக்கைக்கும், நேர்மைக்கும், ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல விரும்புகிறேன்.

Add a Comment