மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-58
————-
ஜெகத்ரட்சகன் இளைய மாணவராக இருந்த காலம் தொட்டு, என்னிடத்தில் பரிவாக வளர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். இரா.ஜனார்த்தனம் மற்றும் என்னுடன்தான், அவர் பழகுவார். எளிமை என்றாலும், ஒரு பெருமிதம் அவரிடம் நிரம்பியிருக்கும்.
வறுமையில் செம்மை என்று சொல்வார்களே! அதுபோல, தன் வாழ்க்கையில் குறிக்கோளோடு, விடாமுயற்சியோடு, ஜெகத்ரட்சகன் பெற்ற வளர்ச்சி உண்மைக்கும் உழைப்புக்கும் கடைத் வெற்றி என்று, நான் உறுதியாகச் சொல்வேன். மாணவப் பருவத்திலேயே, ஜெகத்ரட்சகனுக்குப் புரட்சித்தலைவரை நன்றாகத் தெரியும்.

Add a Comment