மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-109
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
புரட்சித்தலைவர் மக்கள் மனத்தில் தன்னைப் பற்றி பதிந்திருந்த தோற்றப் பெருமிதத்தை ஒரு துளிகூட கலைத்துக் கொள்ள விரும்பியதில்லை.
படத்தின் தலைப்பானாலும், பாடலானாலும், நடிக்கும் தன் கதாபாத்திர பெயரானாலும் கடுகளவும் சிதைவை ஏற்படுத்தக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
அதனால்தான், தேவதாஸ் படத்தில் தன்னை நடிக்கக்கூடாதா என்று கேட்டதற்கு குடிக்காத தேவதாசை வைத்து கதை எழுதச்சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றார்.
அதற்கு கண்ணதாசன் , தேவதாஸ் தண்ணீரே குடித்ததில்லை நீங்கள் வேண்டுமானால், அரிதாசாக நடிக்கலாம் என்று சொல்லி சிரித்தாராம்.
பாடுபட்டு தேடிப்பெற்ற பண்பாட்டு படிமத்தை பாழாக்கக்கூடாது என்பது திட்டமிட்டு கூர்மையாக பாதுகாத்து வந்தார்.

Add a Comment