POST: 2017-11-14T10:22:11+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-128
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–

அதேபோல் மற்றொரு இனிமையான பாடலும் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் குரலில் அமைந்தது….

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
தெங்கோடி தென்றல் தரும் ராகங்களே- எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை கொண்ட பூமி கொடுத்தான் -நாம்
படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *