============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 262)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 9)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
3. மாணவர்களுக்கு உயர் கல்வி, அவர்களது உடல் நலம். ஒழுக்கம் மற்றும் பல்வேறு கல்வித் துறைகளிலும் உயர்வுக்கு வழி காட்டுதல்,
4. மற்ற பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், அரசு சார் அல்லது அரசு சாராத நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த உயர் ஆய்வில் ஈடுபடுதல்.
5. நூலகங்கள், ஆய்வு மையங்கள், கலைக் கூடங்கள், புத்தக வெளியீட்டுத்துறை போன்றவற்றை உருவாக்கிப் பேணுதல்.
6. உயர் ஆய்வு வளர்ச்சிக்கு வழிகாணும் புதிய பதவிகளை உருவாக்கித் தகுதியுடையவர்களை நியமித்தல்,
7. ஆய்வுத்தகைமைகள், விருதுத்தகைமைகள், பரிசுகளைத் தகுதியுடையோர்க்கு வழங்குதல் மேலும்,
8. உயர் ஆய்வு நிலையில் பட்ட, பட்டயப் படிப்புகளை உருவாக்கம் செய்து நடத்துதல்.

Add a Comment