நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 196)
………………………..
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது ஒரு தமிழ்ச் சொல்லாடல் தான் நினைவுக்கு வருகிறது… ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’… ஏனெனில், அண்மையில் ஆங்காங்கில் ஏற்பட்ட கலவரத்தைப் பார்த்த பிறகு, சீன இனம் சிறப்பிழந்து வருகிறதா எனும் கேள்வி எழுகிறது! மேலை நாடுகளில் சீன இனத்தவரோடு வாழ்ந்துவரும் என்னைப் போல சிலர் மற்ற இனத்தவரோடு இந்நாள் காலத்தில் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் சீன இனம் மாறுபட்டதாக தெரியவில்லை.
‘ஒரு நாடு இரண்டு அமைப்பு’ என்கிற கோட்பாட்டை மீறும் செயல்களாக ஆங்காங், தாய்வான், மக்காவில் சீன இனத்தவரிடையே மேற்கெண்டு வரும் தாக்குதல்கள், போராட்டங்கள் அந்த இனத்தின் தொய்வுநிலை – வெள்ளிடை மலையாக காட்சியளிக்கிறது.
—– மருத்துவர் கண்ணன், ஆஸ்திரேலியா

Add a Comment