நினைத்தாலே இனிக்கும்!
புலவர் இளஞ்செழியன்
‘பேச்சுப் பாடகர்’ என்றும்,’பாதி
அண்ணாத்துரை’என்றும்
உவமைக்கவிஞர் சுரதாவால்
புகழப்பட்டவர் ஔவை நடராசன்
அவர்கள்.
1971களில் தமிழகத்தில் தி.மு.க.
ஆட்சி புரிந்த காலம்!முத்தமிழறிஞர் கலைஞர்
அப்போது முதலமைச்சர்! டாக்டர்
நாவலர் கல்வி அமைச்சர்!மன்னை நாராயணசாமி கூட்டுறவுத்துறை
அமைச்சர்!மன்னார்குடியில்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்
விழா பெரிய அளவில் ஏற்பாடு
செய்திருந்தார் மன்னையார் அவர்கள்.
டாக்டர் ஔவை நடராசன் தலைமையில்,மன்னார்குடி
நோக்கி,ஓர் அணி புறப்பட்டது!
எதற்காக?கவியரங்கத்தில்
கவிதைமழை பொழிவதற்கும்,
பட்டிமன்றத்தில் பட்டை கிளப்புவதற்கும்!அந்த அணியில்
அப்போது யார் யார் தெரியுமா?
கவியரசர் பொன்னி வளவன்,
கவிஞர் வைரமுத்து,சேலம்
முருகுசுந்தரம்,தத்துவக்கவிஞர்
குடியரசு,தஞ்சைப்புலவர்
தொல்காப்பியன்,புலவர் ஆடலரசு,
தஞ்சை கூத்தரசன்,நான் இத்தனை பேர்களும் அடக்கம்ஔவையின் அந்த
அணியில்!
போருக்குச் செல்லும் வேங்கைகளைப்போல் நாங்கள்
சென்றோம்!
மன்னார்குடி மக்கள் அமைச்சர்
மன்னையார் ஏற்பாட்டில் கடல்
அலைபோல் திரண்டிருந்தார்கள்.
கூட்டம் அலைமோதியது!ஒருவருக்கொருவர்
கொருவர் தலைமோதியது!
கூட்டம் தொடங்கியது!மாண்புமிகுஅமைச்சர்
மன்னை நாராயணசாமி அவர்கள் அனைவரையும் பாவேந்தரின்
பைந்தமிழால் வாழ்த்தி
வரவேற்றார்! கையொலியின்
ஓசை ஓய்ந்து அமைதியின்
ஆட்சி அரசோச்சிய அந்த நேரத்தில்
ஔவையின் ஒய்யாரத்தமிழ் ஓங்கு தமிழ்
தலைமைக் கவிதையாய்
ஒலித்தது!அவர் குரல் ஒலிக்க
ஒலிக்க,மக்களின் கையோசையும் விண்ணைத் தொட்டது.
கவிஞர்கள் ஒவ்வொருவரையும் ஔவை அவர்கள் அறிமுகப்படுத்திய விதம்,எங்களையும் அரங்கத்தாரையும்குதூகலத்தில்
குளிக்கவைத்தது.
வஞ்சனையில்லாமல் தமது வண்ணத்தமிழ்ச்சொற்களால்
சொற்களால் எவரையும் தம்
வசப்படுத்திக் கொள்ளுகிற சித்தர் அல்லவா ஔவை!ஔவை தலைமையில் புறப்பட்ட அந்த அறிவுப்படை,ஆற்றல் படை
கவியரங்கம் பட்டிமன்றம்
இரண்டிலுமே
மன்னை மண்ணிலேபுகழ்க்காவி
யங்களை எழுதிவிட்டுத் திரும்பின.மன்னையார் வைத்த
நளபாக விருந்திலும் நாங்கள்
புளகாங்கிதம் அடைந்தோம்.
அடுத்த கூட்டம் சின்னமனூரில் நடந்தது
ஔவை தலைமையில்,இதே
படையுடன்!வழக்கறிஞர்
கஸ்தூரி,புலவர் பூங்கோதை,
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச்
செயலாளர் கெ.பக்தவத்சலம்
மூவரும் எங்களுடன் சேர்ந்து
கொண்டார்கள்.வழக்கம்போல்
கவியரங்கம் நடந்தது!அண்ணாவின் நிலைத்த
புகழுக்குக் காரணம் அவருடைய
எழுத்தா?பேச்சா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது!நான் அண்ணாவின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவருடைய எழுத்தோவியமே என்று பேசினேன்.தலைமை
தாங்கிய பாதி அண்ணாத்துரை
என்னும் ஔவையோ,அடடா,கூடிய
மக்கள்எல்லாம் கோடி புண்ணியம்
செய்திருந்தால் அல்லவோ, இப்படி ஒரு மகானின் செந்தமிழ்
அருவிப்பேச்சைக்
கேட்டிருக்க முடியும் என்று தங்களுக்குள்
பேசிக்கொண்டார்களாம்!அப்படி
ஒரு பேச்சுப் பிதாமகன் ஔவை
நடராசனார் அவர்கள்!
ஔவைப் பெருமகனார் தமது
85ஆவது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த நேரத்தில்,அவரைப்
பற்றிய வரலாற்று நிகழ்வுகளை
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
.

Add a Comment