என்னிதன் பண்பே !
_________________________________________
சேரமான் கோதை சிந்திய கண்ணீர்
யாங்குப் பெரிது ஆயினும்,
நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை ‘
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு
ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ,
இன்னும் வாழ்வல்
என் இதன் பண்பே !
– புறம் 245.
இன்றைய நாள் ( 10 – 12 – 2020 ) கடந்த ஆண்டு வரை
எனக்குப் பொன்னாளாக இருந்தது .
இன்று 59 ஆம் ஆண்டைய
திருமண நாளை நினைவூட்டுகிறது .
தாராவின் படங்களையும் ,
இசை இயற்புலவர் விசயலட்சுமியிடம் வீணை கற்ற வித்தகமும்
பெயர்த்தியை வாழ்த்திய பெருமிதத்தையும்
இதனோடு இணைத்திருக்கிறோம் .
அமெரிக்காவில் வாழும் தமிழ்ச்செல்வி தேமொழி அவர்கள்
தொகுத்தெடுத்த காணொளிக்கு
என் கைகுவித்த வணக்கம் .
நெஞ்சில் அழல் மூட்டுகிறது .
ஆறுதல் எப்படிப் பெறுவது
– ஒளவை நடராசன்

Add a Comment