POST: 2021-01-21T11:31:53+05:30

சாதனைச்சிகரம் டாக்டர் சாந்தா அம்மையார்.

மரபாலும் புகழாலுலும்

மாணப் பெரிய குடும்பத்தில் பிறந்து

வாழ்வு முழுவதும்

புற்றுநோய் நீக்கத்துக்காக

மருத்துவக்கழகம் நிறுவி

அல்லும் பகலும் அயராது உழைத்த

அருங்குணத்திலகம்

டாக்டர் சாந்தா அம்மையாரின் பிரிவு

மருத்துவ உலகத்துக்கு நிலையான

வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது .

அன்புற்றாய் ! – பண்புற்றாய் ! –

நோயர்பால் நண்புற்றாய்

வன்புற்றால் வருந்தியோர்க்கு

வாழ்வளித்தாய் !

அவரெல்லாம் திரண்டு வந்து

டாக்டர் எங்குற்றார் எனக் கேட்டு

நீங்காத கண்ணீரோடு

நெஞ்சம் நனைய நிற்கின்றார்

ஆறுதல் கூற முடியுமா !

என் இளவல் ஞானசம்பந்தன்

மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது

நீங்கள் வந்து கூறிய ஆறுதலும் அளித்த

மருத்துவச் செழுமையையும்

நான் என்றும் மறப்பதிற்கில்லை .

புனிதவதியாராகப் புற்றுநோய்க்கழகத்தை

நிறுவித் தந்த பெருமிதத்தோடு

வாழ்ந்து மறைந்துவிட்டார் !

காலம் எப்படியும் தன்

கணக்கை முடிந்துவிடுகிறது !.

துயரத்தோடு

ஒளவை நடராசன்

19 – 1 – 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *