POST: 2021-05-11T10:12:13+05:30

புலவர்க்கு அரசன் புரிசை நடராசன் !

பெருஞ்சொல் விளக்கப் பேருரையாளர் என்று நாடும் – ஏடும் கைகுவித்துப் போற்றிய புரிசை முருகேச முதலியாரின் பெயரன் புரிசையார் புலமைப்புதையலாக வாழ்ந்தார் .

வாரியார் சுவாமிகள் தனக்கு ஆசிரியர் என்று போற்றினார் .

புலமை வாய்ந்த மரபின் பெயரன் புரிசை நடராசன் பட்டிமண்டப மேடைகளிலும் – தனிப் பொழிவுகளிலும் அனைவரையும் கவர்ந்தார் .

திருமுறையார்வமும் – கம்பர் தோய்வும் பெற்றிருந்தார் .

புரிசையார் கம்பராமாயணக் கலக்கமும் தெளிவும் என்று கட்டுரைகள் வரைந்ததையும் மலேசியாவிலோ – இலங்கையிலோ – ஈழகேசரியிலோ வெளிவந்தன என்று என்னிடம் ஒருமுறை கூறினார் .

பேரொளியாகிய புரிசையார் பலமுறை சென்னை வந்த போது நான் ஈரோட்டுப் பெருமகனார் சென்னியப்ப முதலியார் இல்லத்தில் கண்டு அளவளாவுவோம் .

முதுமையைத் தொட வந்த அசைவில் மறைந்தார் என்பதைக் கேட்டுக் கலங்கினேன் !.

புரிசையார் மரபை எவர் இட்டு நிரப்புவார் !

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *