POST: 2021-06-11T10:10:32+05:30

சமயப் பேரூரை ஓய்ந்தது !

எனக்குத் தெரிந்த ஆங்கிலம் பயின்ற என் தலைமுறையினர் பேராசிரியர் நிலையில் பக்தி நெறியில் ஆட்பட்டு தோய்ந்த தொண்டர்களாய் மாறினர் .

ஓய்வு பெற்றதும் ஆங்கில முதுகலை மாணவர் விரும்பிக் கற்றது அரவிந்தர் படைப்புக்களை – அமைதியும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த தத்துவப் பேராசிரியர் அறிஞர் நாகராஜ் ராவ் அவர்களை நான் கண்டு பேசியதுண்டு .

அவர் திருமகளாரே திருமதி பிரேமா ( 12 .6. 1945 – 1 6.2021 ) .

அலைகடல்போல ஆங்கிலத்தில் பொழிவாற்றிய பெருமை பிரேமா அவர்களுக்கு இளம் பருவத்திலேயே வாய்த்தது .

நிறைவாழ்வில் சொல்மாலை வழங்கும் நாச்சியாராக ஆசிரம வாழ்க்கையில் அமைதி கண்டார் .

அன்னையார் திருமதி சீதா சிதம்பரம் அவர்களோடு நெருங்கிய தோழமை கொண்ட ஞானச்சுடராய் ஒளிர்ந்தார் .

என் அருமைத் திருமகள் சுதா நலங்கிள்ளி முதுகலை ஆங்கிலம் அவரிடம் பயின்ற சிறப்பைப் பாராட்டிக் குறிப்பிடுவார் .

கீதையுரை போலப் பாகவதப் பொழிவிலும் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய அவையினர் உணர்வைச் சிலிர்க்க வைத்தார் .

உறவுக்கும் ஒரு முடிவு –
துறவுக்கு அதே முடிவு தான் .

எவரும் அறியாப் பதம் பெற்ற அம்மையாரை நினைந்து போற்றுகிறேன் .

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *