POST: 2021-07-10T10:08:01+05:30

அருவியும் – மலையும் வாழியர் நெடிதே !

உலகப்புகழ்ப் பெற்ற கனடா பல்கலைக்கழகத்தின் சார்பில் நிறுவப் பெற்ற நாவலர் அறக்கட்டளை
கவிப்பேரருவி – தமிழ் முழுதறிந்த தன்மையர் நம் கவியரசர் ஈரோடு தமிழன்பனுக்கும் ,

நுண்ணிய புலமை வாய்ந்த திண்ணிய நெஞ்சினர் என்று அனைத்து நாடுகளும் பாராட்டும் நிறைகலைத்திலகம் பேராசிரியர் மறைமலை அவர்கட்கும்

விருது வழுங்குவதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தேன் .

என் தோழராகிய கவியரசரும் –

மாணவச்செம்மல் என்று மதித்துப்போற்றும் மறைமலை அவர்களும்

தகுதியால் தலை நிமிர்ந்து வென்று நிற்கும் வெற்றியாளர்கள் .

இந்தப் பெருமித வெற்றியை நான் போற்றிப் பாராட்டுகிறேன் .

இருவரும் நேரில் கனடா செல்ல வாய்ப்பில்லாது போனால் ,

இருவரின் இல்லம் தேடி கனடா பல்கலைக்கழகத்தினர் வந்து வழங்குவது பொருத்தமாக இருக்கும் .

வளர்க தமிழ் ! வெல்க தமிழ் !

அன்போடு
ஒளவை நடராசன்

10 07 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *