தென்குமரித்திலகம் வாழ்க !
பெருந்தலைவரின் அருமந்த சீடராகவும் – காங்கிரசுப் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராகவும் ,
என்றும் ஓய்வறியாத உயரிய தொண்டராகவும் –
மக்கள் நலனுக்காகப் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட இலக்கியச் செல்வராகவும் ,
மேடை மன்னராகவும் –
இலக்கியக் கடலாகவும்
எவரோடும் பகைகொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிரும் இலக்கியச் செம்மல் குமரி அனந்தன் அவர்கள் 90 ஆம் அகவையைத் தொடுகிறார்கள் .
நாடாளுமன்றத்தில் தமிழுக்காக முழங்கியதும் – தமிழகத்தில் பனை வளம் பெருக முழங்கியதும் என்றும் ஒப்பில்லாதவையாகும் .
புகழ் பொலியும் திருமகளார் இரு மாநிலங்களின் மேதகு ஆளுநர் அவர்கள் தம் தந்தையார் தன்னை வளர்த்த தகைமையைப் பாராட்டிக் கூறியுள்ளார் .
சிந்தையிலும் – சென்னியிலும் பெருந்தலைவரையே நிலைநிறுத்திய கொள்கைக்குன்று குமரிஅனந்தன் பல்லாண்டு வாழ்க !
எண்ணிப் பத்தாண்டுகள் அவர் தாண்டுவதைத் தமிழகம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறது .
அண்மையில் தமிழக அரசு தகுதிமிக்க இத்தமிழ்ப் பெருந்தகைக்கு மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கிச் சிறப்பித்தது பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போல் இருந்தது .
வாழ்க ! வாழ்க !!
ஒளவை நடராசன்

Add a Comment