POST: 2022-06-09T10:51:17+05:30

சிங்கப்பூர் இந்திரா மறைவு !

சிங்கப்பூர் இன்மொழித்திலகம் திருமதி இந்திரா கிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து மனம் கலங்கினேன் .

பள்ளி ஆசிரியராகப் பல்லாண்டுகள் அரும்பணியாற்றியதோடு தமிழ் மாநாடுகளில் ஆர்வத்தோடு பங்காற்றி வந்தார் .

சிங்கப்பூரில் நண்பர் கிருஷ்ணனுடன் இணைந்து இல்லற நல்லறத்தில் தமிழ் வளர்ச்சிப்பணிகளைப் பல நிலைகளில் ஆற்றினார்கள் .

நானும் என் துணைவியாரும் சிங்கப்பூர் சென்றபோதெல்லாம் விமான நிலையத்துக்கு வந்து கிருஷ்ணன் இந்திரா காட்டிய பரிவுக்கு நிகரில்லை .

ஆடல் அரசியாகத் திருமகள் கவிதா வளர்ந்து புகழரசியாக உலக நாடுகள் வலம் வருகிறார்.

தன் மகளின் புகழுக்காகக் கிருஷ்ணனும் இந்திராவும் பல நாடுகள் சென்று பாராட்டுப் பெற்றவர்கள் .

1991 ஆம் ஆண்டில் என் மகன் அருளைத் தன் மகன் போல் நெஞ்சாரப் போற்றியதோடு சிங்கப்பூரில் நண்பர் சாந்தகுமாரையும் ஒரு திங்கள் அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தனர்.

ஏறத்தாழ அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளிலும் இருவரும் கட்டுரைகள் வழங்கியதோடு
உரையுமாற்றினார்கள் .

திருமதி கவிதாவின் சிங்கை இல்லத்தில் நீத்தார் சடங்கு நிகழ்வதை அறிந்து பெருந்துயரடைந்தோம் .

இந்திராவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது

.நண்பர் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் தாரகை கவிதாவுக்கும் எங்கள் ஆறுதல் .

ஆற்றொணாத் துயரத்தோடு

ஒளவை குடும்பம் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *