Dr. V.S. NATARAJAN Geriatric Foundation
encourage – support – achieve
உலக முதியோர் நாள் விழா
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை வழங்கும்
“ ஐம்பெரும் விழா ”
* 90 அகவை எய்திய
9 முதியவர்களுக்கு கைத்தடி வழங்கி சிறப்பு செய்தல்.
நூல்கள் வெளியீடு : –
முதியோர் நலம்
தெரிந்து கொள்வோம்
மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி டாக்டர் வி.எஸ். நடராஜன்
முதியோர் நல அறக்கட்டளையும், சங்கர நேரத்ராலயாவும் இணைந்து முதியவர்களுக்கு வீட்டிலேயே கண் முழு பரிசோதனை செய்வது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* ஹெல்பேஜ் இந்தியாவின் “ கோல்டன் தேசிய விருது ” பெற்றமைக்கு
டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கு பாராட்டு.
( அறிமுகம் ( Gait Watch ) – கீழே விழுவதின் சாத்திய குறிகளை கண்டறியும் கருவி.
நாள் : 08.10.2022, சனிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம்,
69, திரு.வி.க. சாலை, இராயப்பேட்டை,
சென்னை – 600 014.
அனைவரும் வருக !
பத்மஸ்ரீடாக்டர் வி.எஸ். நடராஜன்
திரு. இராஜசேகரன் மணிமாறன்
நிறுவனர் & தலைவர்
துணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்
Supported by: kauvery காவேரி மருத்துவமனை ,
சென்னை – 600 018..
நிகழ்ச்சி நிரல்
இறை வணக்கம்
வரவேற்புவரை – : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்,
ஆசிரியர், கவிதை உறவு
90 அகவை எய்திய 9 முதியவர்களுக்கு கைத்தடி வழங்கி சிறப்பு செய்பவர் :
பிரபல திரைப்பட இயக்குநர் திரு எஸ் பி முத்துராமன்
நூல்கள் வெளியீடு :
முதியோர் நலம் முதல் பிரதியை வெளியிட்டு
: வாழ்த்துரை வழங்குபவர் தியாகி லக்ஷ்மிகாந்தன் பாரதி, I.A.S. (Retd.)
முதல் பிரதியை பெற்று சிறப்புரையாற்றுபவர் :
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
– தெரிந்துக் கொள்வோம் மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி
முதல் பிரதியை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குபவர் : மருத்துவர் சு. தில்லைவள்ளல், இதய நல மருத்துவர்,
வெங்கடேஸ்வரா மருத்துவனை
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையும், சங்கர நேத்ராலயாவும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல்
மருத்துவர் கிரிஷ் ஷிவ் ராவ்,
தலைமையதிகாரி,
நிர்வாக மருத்துவ இயக்குநர்,
சங்கர நேத்ராலயா
கண் மருத்துவமனை
ஹெல்பேஜ் இந்தியாவின் “ கோல்டன் தேசிய விருது ” பெற்றமைக்கு
டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கு பாராட்டு ஏற்புரை வழங்குபவர் : பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
மூத்த முதியோர் நல மருத்துவர்
அறிமுகம் ( Gait Watch ) – கீழே விழுவதின் சாத்திய குறிகளை கண்டறியும் கருவி.
முனைவர் எல்.எஸ். ஜெயஸ்ரீ, பேராசிரியர், பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரி, கோவை.
நன்றியுரை
: திரு. இராஜசேகர் மணிமாறன்,
துணை நிறுவனர் மற்றும்
நிர்வாக அறங்காவலர்
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை
அறக்கட்டளையின் நூல்கள் அரங்கத்தில் கிடைக்கும்.
செய்திப்பரல்
தினசெய்தி – 11 10 2022 –
பக்கம் எண் – 8
சென்னை , அக் 11
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் பங்கேற்றார்.
உலக முதியோர் நாளை டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை ” ஐம்பெரும் விழாவாக சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
90 அகவை எய்திய 9 முதியவர்களுக்கு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கைத்தடி வழங்கி, பொன்னடை போர்த்தி கௌரவித்தார்.
டாக்டர் வி.எஸ். நட ராஜன் அவர்கள் எழுதிய ” முதியோர் நலம் ” என்ற நூலை தியாகி லஷ்மிகாந்தன் பாரதி, அவர்கள் வெளியிட, முனைவர் ஒளவை அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை பெற்றுக் கொண்டார்.
டாக்டர் வி.எஸ். நடராஜன், டாக்டர் பா. அரிசங்கர், முதியோர் மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவருடன் இணைந்து எழுதிய ” தெரிந்து கொள்ளுவோம் மருத்துவப் பரிசோதனைகளைப் பற்றி ” என்ற நூலும் வெளியிடப்பட்டது.
அதை டாக்டர் சு. தில்லைவள்ளல், இதய நல மருத்துவர், வெங்கடேஸ்வரா மருத்துவமனை வெளியிட, டாக்டர் வி.எஸ். நடராஜன் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் வி.எஸ். நட ராஜன் தனது ஏற்புரையில் “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதுமையே வா… வா… என்ற எனது நூலை விகடன் பிரசுரித்துள்ளது .
அதில் விகடன் ஆசிரியர் 100 மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணிகளை இந்த புத்தகம் செய்யும் என்பதில் ஐயம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுமார் 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன, முதியோர் மருத்துவத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உடல் நலம், மன நலம் மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றை மனதில் கொண்டு ” முதியோர் நலம் ” என்ற நூல் எழுதப்பட்டது.
இதில் முதியோர்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும் அவற்றை வராமல் தடுப்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
” தெரிந்து கொள்வோம் மருத்துவப் பரிசோதனைகளைப் பற்றி ” என்ற நூலில் எந்த நோய்க்கு எந்த
பரிசோதனை செய்யவேண்டும் என்பதைப் பற்றி மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
இந்நூல் முதியவர்களுக்கு மட்டுமின்றி இளம் மருத்துவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை ” என்று கூறினார்.
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சங்கர நேத்ராலாயாவுடன் இணைந்து முதியோருக்கு வீட்டிலேயே சென்று கண் பரிசோதனை செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அதன் மருத்துவ இயக்குனர் டாக்டர் கிரிஷ்ஷிவ்ராவுடன் கையெழுத்திடப்பட்டது.
வெல்பேர் இந்தியாவின் ” கோல்டன் தேசிய விருதை ” டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் பெற்றமைக்கு பாராட்டி, விருதை கொடுத்து, திரு. ஏட்வின் பாபு அவர்கள் கௌரவித்தார்.
கீழே விழுவதின் சாத்திய குறிகளை கண்டறியும் என்ற கருவியை கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எல். எஸ். ஜெயஸ்ரீ அறிமுகப்படுத்தினார்.
விழா முதலில் கலைமாமணி ஏர்வாடி திரு.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, நன்றியுரையை திரு. இராஜசேகரன் மணிமாறன், துணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் நிகழ்த்த விழா இனிதே நிறைவடைந்தது.
காவேரி மருத்துவமனை, சென்னை விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

Add a Comment