புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆
15.9.2022 வியாழக்கிழமை,
சென்னை வர்த்தக அரங்கம்,இரவு 9.00 மணியளவில்
திக்கற்று நிற்கும் மாற்றுத்திறனாளிகளின் திசைகாட்டும் கருவி தீபக் நாதனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது (சமூகப்பணி – நம்பிக்கை நட்சத்திரம் ) விருது வழங்கி பாராட்டுரை முனைவர் அருள்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள்.
இதுதான் அந்தக் குடும்பம் .
பேராசிரியர் தீபக் நாதனுக்கு ஊன்றுகோலாகவும், துண்டுகோலாகவும் தாயும் தாரமும் இணைந்து அவருக்கு ஊக்கம் அளிக்கிறார்கள்.
குடும்பம் தாங்குவதனால் சமூகமும் உறுதியாக தாங்கும்.
கிட்டத்தட்ட எல்லாருக்கும் நடுவுநிலைமைக்கு ஒரு பாசறையாக புதிய தலைமுறை மிளிருகிறது.
இவர்களுக்கு கிடைத்த பெருமை தமிழகத்திற்கு கிடைத்த பெருமை தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை
என்ற குறளுக்கிணங்க விருது பெற்றவர்களை பாராட்டுகிறேன்.
வணக்கம்

Add a Comment