தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பேரறிஞர் அவ்வை நடராசன் படத்தினை 26.4.2023,,புதன்கிழமை அன்று
டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஏசி சண்முகம் திறந்து வைத்தார்.
மகாகவி பராதி விருது பெற்ற அவ்வை அருள்,
தன் தந்தையின் உருவப்படம் திறப்புக்கு நன்றி தெரிவித்தார்.
அதோடு அவ்வை சண்முகத்தின் குடும்பத்தோடு தங்கள் குடும்பத்துக்கு இருக்கும் உறவை வெளிப்படுத்திய அருள், கல்வியாளர் ஏசி சண்முகத்தின் பரோபகாரம் தொண்டுள்ளத்தைப் பாராட்டினார்.
அவ்வை அருள், டைரக்டர் மௌலி, ஆர் பாண்டியராஜன், காந்தி கண்ணதாசன் உட்பட 14 பேருக்கு “ கலை மேதைகள் ” விருது: நீதிபதி எஸ் பாஸ்கரன் வழங்கினார்
சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் பத்மஸ்ரீ அவ்வை டி கே சண்முகத்தின் 111ஆவது பிறந்தநாள் விழா மயிலை ராகசுதா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை வகித்த தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
‘

Add a Comment