POST: 2023-09-18T07:36:13+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, ஆவணி – 29
15.09.2023 வெள்ளிக்கிழமை,
தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் கி. குமார்‌
முதல்வர்‌ தேசியக்‌ கல்லுரி, திருச்சிராப்பள்ளி

நோக்கவுரை:
கவிஞர்‌ நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்‌

சிறப்புரை:
உயர்திரு. திருச்சி சிவா
நாடாளுமன்ற மாநிலங்களவைக்‌ குழுத்தலைவர்‌

10.30 – 11.10:
“செம்மொழித்‌ தமிழின்‌ சிறப்ப”
மூனைவர்‌ இரா. மாது செயலாளர்‌ – திருச்சிராப்பள்ளிக்‌ கம்பன்‌ கழகம்‌

11.10 – 11.30: தேநீர்‌ இடைவேளை

11.30 -12.10:
“மரபுக்‌ கவிதைகளின்‌ சிந்தனையும்‌ சிறப்பும்‌”
முனைவர்‌ ந. விஜய சுந்தரி
உருமு தனலட்சுமி கல்லூரி – திருச்சிராப்பள்ளி

12.10 – 1.00
“கண்களைத்‌ திறந்த கதை உலகம்‌”
கவிஞர்‌ நந்தலாலா
திருச்சிராப்பள்ளி

1.00 – 1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20:
“புதுக்கவிதையின்‌ தோற்றமும்‌ ஏற்றமும்‌”
நெல்லை ஜெயந்தா
திரைப்படப்‌ பாடலாசிரியர்‌

2.20 – 3.00:
“அன்னைத்‌ தமிழ்‌ வளர்த்த அறிஞர்களும்‌, தலைவர்களும்‌”
முனைவர்‌ இரா. காமராசு
தமிழ்ப்பல்கலைக்கழகம்‌, தஞ்சாவூர்‌

3.00 – 3.40:
“நாடகத்திலும்‌ திரையிலும்‌ நடந்த தமிழ்‌”
திரு. ௧ . சிவகுருநாதன்‌
பொதுச்செயலாளர்‌
சோழ மண்டலத்‌ தமிழிலக்கியக்‌ கூட்டமைப்பு

3.40 – 4.00:
சான்றிதழ்‌ வழங்கி நிறைவுரை
திரு. அ. பொ. சிவகுமார்‌
மாவட்ட நூலக அலுவலர்‌
திருச்சிராப்பள்ளி

நன்றியுரை:
முனைவர்‌ சா. நீலகண்டன்‌
தேசியக்‌ கல்லுரி – திருச்சிராப்பள்ளி

நாட்டுப்பண்

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை என்று தொடங்கப்பட்டு சென்னையில் ஆகத்து 30 அன்று முதல் பாசறை நிகழ்வும் செப்டம்பர் 11 அன்று திருத்தணியில் இரண்டாம் பாசறை நிகழ்வும் செப்டம்பர் 15 அன்று திருச்சியில் மூன்றாம் பாசறை நிகழ்வும் நடைபெற்ற வேளையில் ஆத்தூரில் இருக்கும் சுழற் கழக நண்பர்கள் இணைந்து இளையோர் இலக்கியப்பயிற்சிப் பாசறை என்ற தனி நிகழ்வை அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கிறது என்று அழைப்பிதழ் வெளியிட்டு இருப்பதை கண்டு மகிழ்கிறேன் ….

தமிழ் வளர்ச்சித் துறை இட்டப் பெயரினை அனைவரும் தொட்டுப் பெரிதாக்கி வருவதைக் காண்பதில் வாழ்த்துகிறேன்.

_ ஒளவை அருள். இயக்குநர்-தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *