புதையல் கிடைத்தது ….
அழகுதமிழில் எப்படி ஒருவரைப் பாராட்ட வேண்டும் , எந்த சொற்களை எங்கு அதில் எழுத வேண்டும் என்ற சொற்களஞ்சியம் இந்த நூல்
ஒளவையின் சிந்தனைப்புதையல்
என்றால் மிகையில்லை .
ஒளவையாருடன் நான் ஒருநாள் அவர்களை உடலைப் பரிசோதிக்கச் சென்றபோது அவருடைய இரத்த அளவு குளுக்கோஸ் 400 என்று இருந்தது .
ஆகையால் தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி ஏனைய மருந்துகள் அளித்துவிட்டு வந்து விட்டேன் .
பிறகு சாயந்தரம் நான் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்த பொழுது ,அவர் அங்கு நின்றுகொண்டு ஒரு இருபது பேர் நடுவில் உரையாற்றிக் கொண்டிருந்தார் .
என்ன ஐயா உங்களுக்கு 400 இருக்குதே , நீங்கள் ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்றேன் .
நீங்க கொடுத்த மருந்தோடு இந்த மருந்து தான் எனக்கு அதிகமாக வேலை செய்யும் என்றார் .
பயந்த நிலையில் போனவனுக்கு அது எனக்கு ஒரு தெம்பு கொடுப்பதாக இருந்தது .
அது போன்று அவர்கள் தமிழை நேசித்தவர்கள் …
அவர்கள் என்றும் பேசப்படுவார் .
மருத்துவர் சு நரேந்திரன்
தஞ்சை
20.5.24

Add a Comment