03fad593-a403-4280-9d21-69ea1cc5cef7

நினைத்தது நடந்தது

தமிழ்க் கணினிவுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது

ஆம், தமிழ்க் கணினிவுலகின் இணையற்ற வேந்தர்

எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர்

முரசு அஞ்சலின் தந்தை

இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் உருவாக்கிய முரசு அஞ்சலில் பல்லாண்டுகளாக் கணினித் தட்டச்சு முறையினை பழகிய யான் இன்று வாயுரையால் சொல்லச் சொல்ல தட்டச்சினை விரைவாகச்செய்யும் ஆற்றலில் வளர்ந்துள்ளேன் என்று அவரிடம் சொல்லும் பொழுது எத்தனை பூரிப்பு …

விளம்பர வானில் வனப்பான எழுத்துருவுகளைப் பற்றி நீண்டு பேசிய பொழுது பல அரிய தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.

தான் பழகிய பல சீன நண்பர்களைக்குறித்து பேசும்பொழுது அவர் சொன்ன ஓர் அருமையான தகவல்

சீனர்களுக்கு மொழிப்பற்று ஒன்று இருப்பதாக தான்
எந்நிலையிலும் பார்க்கவில்லை என்று சொன்னபோது வியந்து நின்றேன்

அப்பாவின் அரிய கையெழுத்து வடிவங்களை குறித்துப் பேசிய பொழுது ஆர்வமாகக் கேட்டார் பிறகு அப்பாவின்
சிந்தனைப்புதையல் என்ற நூலினை பரிசளித்தேன்.

www. Sorkuvai.tn.gov.in வலைதளத்தை பாராட்டி மகிழ்ந்தார்… அதனின் பயனை வருங்காலம் பெரிதும் பயன்படுத்தி பெருமிதம் அடையும் என்று ஊக்கப்படுத்தினார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *