ee0e5190-97dd-4615-bfdf-86c9ddae2066

அப்பாவின் ஈர்ப்பு -தொடர் காவியம்

அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்…

இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்கள் ஒளிப்படங்களுக்கு முன்
மலர் வணக்கம் செய்வதும்

தன்னுடைய சீருந்திலும் அப்பாவின் ஒளிப்படத்தினை அணி செய்து வணங்குவதையும் கண்டு நெகிழ்ச்சியுடன் எங்கிருந்தோ வந்தான் என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் உள்ளேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *